என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆ. ராசா"

    • இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான்.
    • இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம்.

    இன்று திமுக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு திமுக எம்.பி. ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று அவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு?

    கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும்கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.

    எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பா.ஜ.க தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?

    உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் ஒன்றிய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.

    ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் தி.மு.கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அ.தி.மு.க.வையே அழித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, தி.மு.க. மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972ஆம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்த முனைந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள். அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்திய ஒன்றியமே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் 'காந்தாரி' போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • மத்திய அரசின் இசைக்கு நடனமாடுகிற நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் இருக்கிறார்.
    • இந்திய நாட்டிற்கு காவி வண்ணம் பூசுவதற்கு ஒரு நல்ல பெயிண்டராகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் செயல்படுகிறார்.

    வக்பு வாரிய திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பாராமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இந்த குழு ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பிடித்திருந்துள்ளனர்.

    இந்த குழு மத தலைவர்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்துகளை கேட்டது. குழுவில் உள்ள எம்.பி.க்களும் பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தினர்.

    இந்த நிலையில் 44 மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், இதில் 14 மாற்றங்களுக்கு இந்த குழு ஒப்பந்தல் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். வழங்கிய பல்வேறு பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

    14 மாற்றங்களை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு ஜனவரி 29-ந்தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 31-ந்தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    மெஜாரிட்டி வாக்கு என்ற அடிப்படையில் 14 பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாற்றங்களை முன்வைத்தனர். அவைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. அவர்களுடைய திருத்தங்களுக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிர்த்து 16 வாக்குகளும் பதிவாகின" என ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.

    இந்த கமிட்டியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தலைவர் மீது குற்றம்சாட்டினர். டெல்லி தேர்தல் கண்ணோட்டத்தோடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்கிறார் என மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர்.

    கூட்டத்தின்போது ரகளையில் ஈடுபட்டதாக 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய நேரம் தரப்படவில்லை எனவும் புகார் அளித்தனர்.

    இந்நிலையில், வக்பு வாரிய மசோதாவிற்கு பாராமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்ததை கண்டித்து டெல்லியில் எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "மத்திய அரசின் இசைக்கு நடனமாடுகிற நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் இருக்கிறார். இந்திய நாட்டிற்கு காவி வண்ணம் பூசுவதற்கு ஒரு நல்ல பெயிண்டராகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு.

    இஸ்லாமியர்களின் 60% சொத்துக்களை பறிக்கவே, வக்பு சட்டத்திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற துடிக்கிறது பாஜக அரசு. அதற்கு உடந்தையாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மத்திய அரசு பயன்படுத்துகிறது. வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்" என்று தெரிவித்தார். 

    ×