என் மலர்
நீங்கள் தேடியது "சிஆர் பாட்டீல்"
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.
இதையடுத்து உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை யில் சிந்து நதி நீரை இந்தியா எந்தெந்த வகைகளில் பயன்படுத்துவது என்பதற் கான முடிவை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சிந்து நதியில் கூடுதல் நீர் சேமிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நீர், மின் திட்ட பணிகளை நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகளாக விரைவு படுத்துதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல் படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனால் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய நதிகளின் நீரை இந்தியா போதுமான அளவு பயன்படுத்த முடியும்.
ஆறுகள் மற்றும் அணைகளில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளால் இந்திய பகுதிகளில் நீரோட்டம் அதிகரிக்கும். அந்த நீரை இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி திருப்பி விட நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரோட்டம் குறையும்.
ஏற்கனவே பாகிஸ்தானில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய 35 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது எடுத்துள்ள முடிவால் பாகிஸ்தான் மேலும் பாதிக்கப்படும்.
ஏற்கனவே மேற்கு ஆறுகளில் இருந்து பயன் படுத்தக்கூடிய மின் மெகாவாட் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. கிஷன்கங்கா மற்றும் ரேட்லே நீர்மின் திட்ட பணிகளை விரைவாக செல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிந்து மற்றும் துணை நதிகளின் உபரி நீரோட்டத்தை ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தானுக்கு திருப்பி விடவும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல், "சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மோடி அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு முற்றிலும் நியாயமானது மற்றும் தேசிய நலனுக்கானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். .
- மேகதாது திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.
- வெண்ணாறு பாசன கட்டமைப்பை நவீனப்படுத்தும் 2-ம் கட்ட திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்க வேண்டும்.
புதுடெல்லி:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர்.பாட்டீல், இணை மந்திரிகள் சோமண்ணா, ராஜ்பூஷன் சவுத்ரி ஆகியோரை சந்தித்து தமிழக நதிநீர் பிரச்சினைகள், நிதிஉதவி பெறுதல் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.
அவருடன் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கேஎஸ்.விஜயன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
மத்திய மந்திரிகளிடம் அளிக்கப்பட்ட மனுவில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மாதாந்திர அட்டவணைப்படி பிலிகுண்டுலுவில் தண்ணீர் வழங்க வேண்டும்.
மேகதாது திட்டம் தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது. காவிரிப்படுகையில் நீர்ப்பற்றாக்குறை காலங்களில் விகிதாச்சாரப்படி நீர் பங்கீடு செய்ய அறிவியல் பூர்வ விதிமுறையை நிர்ணயிக்க ஆணையத்தை வலியுறுத்த வேண்டும்.
வெண்ணாறு பாசன கட்டமைப்பை நவீனப்படுத்தும் 2-ம் கட்ட திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்க வேண்டும்.
கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி இணைப்புக் கால்வாய் திட்டத்தை உடனே செயல்படுத்த காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல்கட்ட பணிகளுக்காக ரூ,6,941 கோடி செலவு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து, இதுவரை ரூ,245.21 கோடி செலவு செய்துள்ளது. இதனை விரைவாக செயல்படுத்த மத்திய அரசின் கொள்கை அளவு ஒப்புதலையும், நிதியையும் வழங்க வேண்டும்.
முல்லைப் பெரியாற்றில் சிற்றணை மற்றும் மண் அணைகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளின்படி வலுப்படுத்தவும், இடையூறாக உள்ள 15 மரங்களை அகற்றவும், கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லவும் ஒத்துழைக்க கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.
பெண்ணையாறு பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.
குளங்கள் சீரமைப்பு திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கு நிதியில் உள்ள நிலுவைத்தொகை ரூ,212 கோடியை உடனடியாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "மத்திய மந்திரிகள் இந்தியில் பதில் சொன்னார்கள். எங்களுக்கு புரியவில்லை. இருந்தாலும் நமது செயலாளர் விஷயங்களை எடுத்துரைத்தார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தபிறகு அதன்படி ஒருபோதும் தண்ணீர் வழங்கியது இல்லை. இதை எடுத்துச் சொன்னேன். கர்நாடகத்தில் சித்தராமையாவிடம் சொல்லச் சொன்னார்.
ஆனால் தாயாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு என்று நான் சொன்னேன். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த அணையை பலப்படுத்த வேண்டும். அந்த பணிகளுக்கு கேரள அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. மேகதாது அணை விஷயத்தில் பிரம்மாவே அங்கு தோன்றி கட்டச் சொன்னாலும் எதிர்த்தே தீருவோம். அணை விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. எனவே பேச்சுவார்த்தைக்கு இடமில்லை." என்று கூறினார்.






