என் மலர்
நீங்கள் தேடியது "செல்வ முத்துக்குமார சாமி கோவில்"
- திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
- வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு சிறப்பு.
வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளி உள்ள செல்வ முத்துக்குமரனை வணங்கினால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையும். இத்தலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமரனை வழிபாடு செய்வது மூலம் செவ்வாய் தோஷம் பரிகாரம் நிவர்த்தி அடையும். திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
முருகப்பெருமானின் ஆறுமுகங்களும், 12 கைகள் செய்யும் தொழில்களும்:
ஆறுமுகங்கள்:
1. உலகிற்கு ஒளி தருவது ஒருமுகம்,
2. வேள்வி காப்பது ஒரு முகம்,
3. அடியார் குறை நீக்கி வரமருளுவது ஒரு முகம்,
4. வேத ஆகமாய் பொருளை விளக்குவது ஒரு முகம்,
5. பகைவரை தீயோரை அழித்து நன்மை செய்வது ஒருமுகம்,
6.வள்ளிக்கு மகிழ்வை தருவது ஒருமுகம்.
12 கைகள்:
1,2 கைகள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. 3- வது கை அங்குசம் செலுத்துகிறது. 4- வது கை தொடையில் அமர்த்தி உள்ளது. 5,6-வது கைகள் வேலை சுழற்றுகின்றன.7-வது கை முனிவர்களுக்கு பொருளை விளக்குகிறது.
8- வது கை மார்பில் உள்ள மலையோடு சேர்ந்துள்ளது. 9- வது கை வேள்வி ஏற்கிறது.10- வது கை மணியை ஒலிக்கின்றன. 11- வது கை மழையை அளிக்கின்றன. 12- வது கை மணமாலை சூட்டுகிறது.
முருகப்பெருமானின் கிரீடத்தில் உள்ள உறுப்புக்கள்:
கிம்புரி, கோடகம், பதுமம், மகுடம், தாமம்.
ஆறுபடை வீடுகள்:
1.திருப்பரங்குன்றம் (மதுரைக்குஅருகில்), 2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), 3. திருவாவினன்குடி (பழனி), 4. திருஏரகம் (சுவாமிமலை), 5. குன்றுதோறாடல் (திருத்தணிகை), 6. பழமுதிர்ச்சோலை (மதுரைக்கு அருகில்).
வல்லவரான இறைவன் உயிர்களின் மீது கொண்ட கருணை யினால் உயிர்களின் ஆணவமாகிய சூரனின் ஸ்தூல உடம்பை போக்கி (ஆணவ மலம் நீங்கின அச்சூரனின்) ஆத்மாவை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் என்பது சூரசம்காரத்தின் உட்கருத்தாகும்.
வழிபடும் முக்கிய நாட்கள்:
சஷ்டி திதி, விசாகம், கிருத்திகை நட்சத்திரங்கள், செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை ஆகியவை. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு சிறப்பாக உரியது. இவ்விரதத்தால் நினைத்த பயன் கைகூடும்.
கிருத்திகை விரதம்:
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று செல்வ முத்துக்குமரனுக்கு சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
- கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமார கோவில் திருப்பணி முடிந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி யாகம், கோ பூஜை, லஷ்மி ஹோமம், நவகரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை யாகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, பிரம்மசுத்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்ட்டது. பின்னர் கைலாய இசை வாசிக்கப்பட்டு கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பி சாமியை வணங்கினர். கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






