என் மலர்
நீங்கள் தேடியது "லஷ்கர் இ தொய்பா இயக்கம்"
- மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம்.
- ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்தது நாங்கள்தான் என்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஜமாத்-உத்-தாவா அமைப்பைச் சேர்ந்த சைபுல்லா கசூரி மற்றும் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட முசம்மில் ஹாஷ்மி ஆகியோர் ரஹீம் யார் கான் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது முசம்மில் ஹாஷ்மி பேசும் போது, "கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்து நாங்கள் தோற்கடித்தோம். இது இந்திய பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும்.
மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம். மே 7-ந்தேதி இரவில் தாக்குதல் நடத்தினீர். ஆனால் மே 10-ந் தேதி நாங்கள் காலை வேளையில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு பதிலடி கொடுப்போம். கொடுத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் போர்க்களத்துக்கு வந்தால் நாங்களும் போர்க்களத்துக்கு வருவோம்" என்றார்.
வங்காளதேசத்தில் இருந்த ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே ஷேக் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது.
இதில் பாகிஸ்தானின் சதி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு நாங்கள்தான் காரணம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லஷ்கர் -இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக கருதப்பட்டார்.
- இந்தியாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். அவ்வப்போது இந்திய எல்லைக்குள் நுழைந்து சதி வேலையில் ஈடுபட முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை சுட்டுக்கொன்று வருகிறார்கள்.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் அக்ரம் கான். இவர் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் பஜீர் மாவட்டத்தில் அக்ரம் கான் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொன்றது யார்? என்று தெரியவில்லை.
தீவிரவாதத்திற்கு எதிராக இவர் நீண்ட காலமாக பணியாற்றி வந்தார். லஷ்கர் -இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக கருதப்பட்டார். இவரை அந்த அமைப்பில் தெரியாதவரே இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு தீவிரவாத இயக்கத்துக்கு அக்ரம் கான் தீவிர ஆட் சேர்ப்பு பணியில் ஈடுபட்டார். பல இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்களை சேர்த்தார்.
அந்த படையின் தளபதியாகவும் இருந்தார். பல்வேறு தீவிரவாத இயக்கத்துடன் இவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. இவர் சுட்டுக் கொல்லப்பட்டது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதன்கோட் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஷாகித் லத்தீப் என்பவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை தொடர்ந்து நேற்று அக்ரம்கான் மர்ம நபர்களால் கொல்லப்பட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






