search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lashkar e Taiba movement"

    • லஷ்கர் -இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக கருதப்பட்டார்.
    • இந்தியாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். அவ்வப்போது இந்திய எல்லைக்குள் நுழைந்து சதி வேலையில் ஈடுபட முயற்சி செய்து வருகின்றனர்.

    ஆனால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை சுட்டுக்கொன்று வருகிறார்கள்.

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் அக்ரம் கான். இவர் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் பஜீர் மாவட்டத்தில் அக்ரம் கான் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொன்றது யார்? என்று தெரியவில்லை.

    தீவிரவாதத்திற்கு எதிராக இவர் நீண்ட காலமாக பணியாற்றி வந்தார். லஷ்கர் -இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக கருதப்பட்டார். இவரை அந்த அமைப்பில் தெரியாதவரே இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு தீவிரவாத இயக்கத்துக்கு அக்ரம் கான் தீவிர ஆட் சேர்ப்பு பணியில் ஈடுபட்டார். பல இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்களை சேர்த்தார்.

    அந்த படையின் தளபதியாகவும் இருந்தார். பல்வேறு தீவிரவாத இயக்கத்துடன் இவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. இவர் சுட்டுக் கொல்லப்பட்டது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதன்கோட் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஷாகித் லத்தீப் என்பவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரை தொடர்ந்து நேற்று அக்ரம்கான் மர்ம நபர்களால் கொல்லப்பட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×