என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹைட்ரோ கார்பன் திட்டம்"

    • சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் அறிக்கை அளித்துள்ளனர்.
    • மீனவர்கள் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

    தமிழக பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது.

    குறிப்பாக திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10 ஆவது சுற்று ஏல அறிவிப்பில் இராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள நிலப் பரப்பில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

    ரிலையன்ஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் எண்ணெய், எரிவாயு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திறந்தவெளி அனுமதி கொள்கை அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தில் இந்த பகுதிகளை ஒன்றிய அரசு வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

    இதனால் மீனவர்கள் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் அறிக்கை அளித்துள்ளனர்.

    எனவே ஒன்றிய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி., ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள சுற்றுச்சூழல் அனுமதியை மறு ஆய்வு செய்து, திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
    • முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹி ருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது ராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் அடிப்படையில் 3-வது சுற்றுத்திறந்தவெளி ஏலம் மூலம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.

    தற்போது அப்பகுதியில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளை அமைக்கத் திட்ட மிட்டுள்ளது. கிணறு ஒன்றுக்கு 33 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் மொத்தமாக 20 சோதனை கிணறுகளை 675 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்துள்ளது.

    சோதனை கிணற்றுக் கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீட்டு ஆணை யத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித் துள்ளது. திருவாடானை, ராமநாதபுரம், கீழக்கரை, முதுகுளத்தூர், பரமக்குடி, மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கையின் தேவகோட்டை வட்டத்தில் அமைக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியுள்ளது.

    இந்த திட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் திட்டத்தைத் தொடங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் ஓ.என்.ஜி.சி. நிறு வனத்தின் செயலுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.

    அரியலூர், கடலூர் மாவட்டங்களில் இத்திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வில்லை. இதனை முன்மா திரியாகக் கொண்டு ராம நாதபுரம் மாவட்டத்திலும் சூழலியலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
    • இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை.

    காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி கடந்த 2019-ம் ஆண்டு மார்க்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வலா, நீதிபதி மரகத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் மற்றும் வேளான் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசு உரிமம் வழங்காத காரணத்தால், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் எந்த பணியும் துவங்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்கள் மேம்பாட்டு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி இருக்கிறது.

    அந்த சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி அந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    ×