என் மலர்
நீங்கள் தேடியது "தேங்கி நிற்கும் தண்ணீர்"
- வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது.
- தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து வண்ணம் தீட்ட உள்ளதால் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.
அவினாசி
அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் உள்ள தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இதில் சிறிய ரக மீன்கள் குளத்திற்குள் செத்து மிதக்கின்றன. இந்த தெப்பகுள தண்ணீர் துர்நாற்றத்துடன் கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் ஆறாய் ஓடுகிறது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீரை மிதித்து கொண்டுதான் கோவிலுக்குள் செல்ல வேண்டியுள்ளது.
இதை கோவில் நிர்வாகத்தினர் கண்டும் காணாமல் இருப்பது பக்தர்களை முகம் சுழிக்க வைப்பதுடன் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்:- கோவில் கும்பாபிஷேகத்திற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து வண்ணம் தீட்ட உள்ளதால் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. அதில் சிறிது தண்ணீர் கசிகிறது. கூடிய விரைவில் நீர் இறைக்கும் பணி முடிந்து விடும் மேலும் நீர் கசியாமல இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
- சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
பல்லடம்:
பல்லடத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல்லடம் பகுதியில் உள்ள,அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். காந்தி ரோடு பகுதியில் உள்ள மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை, மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
மழை காலம் வரும்போது இந்தப் பிரச்சினைகள் எழுகின்றது. எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் வசதி செய்து மழை நீர் தேங்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.