என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்காவில் விபத்து"

    • விபத்தின் போது காரை சவுரவ் பிரபாகர் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
    • அவர்களின் குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ் லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.

    திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை விட்டு வெளியேறி ஒரு மரத்தில் மோதிய பின்னர் பாலத்தில் மோதியது. இந்த விபத்தில் சவுரவ் பிரபாகர், மானவ் பட்டேல் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காரில் பயணித்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தின் போது காரை சவுரவ் பிரபாகர் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும் போது, கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்களான மானவ் படேல், சவுரவ் பிரபாகர் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தோம்.

    இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களின் குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

    • தாறுமாறாக வேகமாக வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
    • விபத்தை ஏற்படுத்தி 7 பேர் உயிரை பறித்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாஷிங்டன்

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவின்சிலெவி நகரத்தில் உள்ள ஓசனம் பகுதியில் புலன் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றனர்.

    25-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது தாறுமாறாக வேகமாக வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தை ஏற்படுத்தி 7 பேர் உயிரை பறித்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததா? அல்லது சதி வேலை காரணமாக திட்டமிட்டு காரை ஏற்றி தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×