என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயி மாயம்"
- குடும்பத் தகராறில்கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிஷோர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கணேச காலனியைச் சேர்ந்த கிஷோர் (வயது36), இவர் கடந்த 10 வருடங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் குடும்பத் தகராறில்கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிஷோர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அவரது அம்மா குணவதி (54) கொடுத்த புகார்படி கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள காவேரி கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திருமால் (வயது 34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மாடு மேய்த்துக் கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தம்பி சின்னசாமி கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன திருமாலை தேடி வருகின்றனர்.
- ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
- வழக்குபதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகின்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டா ண்டி க்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). விவசாயி, இவர்கடந்த1-ந் தேதி காலை 8 மணிக்கு பண்ருட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவி ல்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் கணேசன் மனைவி மல்லிகா புகார் கொடுத்தார். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகி ன்றார்.






