

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கணேச காலனியைச் சேர்ந்த கிஷோர் (வயது36), இவர் கடந்த 10 வருடங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் குடும்பத் தகராறில்கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிஷோர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அவரது அம்மா குணவதி (54) கொடுத்த புகார்படி கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.