search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் விவசாயி மாயம்: மனைவி போலீசில் புகார்
    X

    பண்ருட்டியில் விவசாயி மாயம்: மனைவி போலீசில் புகார்

    • ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • வழக்குபதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகின்றார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டா ண்டி க்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). விவசாயி, இவர்கடந்த1-ந் தேதி காலை 8 மணிக்கு பண்ருட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்ப ட்டு சென்றவர் வீடு திரும்பவி ல்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் கணேசன் மனைவி மல்லிகா புகார் கொடுத்தார். காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன கணேசனை தேடி வருகி ன்றார்.

    Next Story
    ×