என் மலர்
நீங்கள் தேடியது "தேஜஸ் எக்ஸ்பிரஸ்"
- தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும்.
- தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22671) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும். அதே போல, மதுரையில் இருந்து தாம்பரம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) இனி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் செல்லும்.
தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும். அதே போல, புதுச்சேரியில் இருந்து வந்த பயணிகள் ரெயில் இனி தாம்பரத்திற்கு பதிலாக எழும்பூர் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேஜஸ் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதுரை வரும் போதும், மதுரையில் இருந்து சென்னை செல்லும் போதும் தாம்பரத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
- நேற்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
மதுரை:
தேசிய அளவில் 4 தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் 2-வதாக அறிமுகமான ரெயில் ஆகும். இதனை பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்த தேஜஸ் ரெயில் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ளூர் தொழில் நுட்பத்துடன் தயாரானது. முற்றிலும் குளிர்சாதன பெட்டிகள் அடங்கிய இந்த ரெயில் கட்டணம் மிகவும் அதிகம் ஆகும். அதில் பயணிக்கும் பயணிகளுக்கு டீ, காபி, சிற்றுண்டி, படிப்பதற்கு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் வழங்கப்படும்.
அதிநவீன வசதிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று சென்றது. சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் செல்லக்கூடிய இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதையடுத்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதுரை வரும் போதும், மதுரையில் இருந்து சென்னை செல்லும் போதும் தாம்பரத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
சென்னையில் இருந்து புறப்படும் மதுரை தேஜஸ் விரைவு ரெயில் (22671) தாம்பரத்துக்கு காலை 6.25 மணிக்கு வந்து, 6.27 மணிக்கு புறப்படுகிறது. அதேபோல் மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் (22672) தாம்பரத்துக்கு இரவு 8.38 மணிக்கு சென்று, 8.40 மணிக்கு புறப்படுகிறது.
இந்தநிலையில் மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வது டிரெண்டிங் ஆகி உள்ளது. மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், வசதியான இருக்கைகளுடன் கூடிய தேஜஸ் விரைவு ரெயிலின் உட்புற தோற்றத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை நேற்று மாலை வரை 1.70 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
49 ஆயிரத்து 700 லைக்குகள், 3 ஆயிரத்து 840 மறுபதிவுகளுடன் இது டிரெண்டிங் ஆகி வருகிறது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலின் தாம்பரம் நிறுத்தத்தின் மூலம் தென் மாவட்ட பயணிகள் அதிகாலை நேரத்தில் எழும்பூர் சென்று மீண்டும் தாம்பரம் வரும் சிரமம் குறையும். மேலும் இந்த ரெயிலை பயணிகள் முழுமையாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
- திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும்.
- கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
சென்னை:
திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதாக கடந்த 10-ந்தேதி தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இதனால் பல்வேறு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.22671), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22672) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* குருவாயூரில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* செங்கோட்டையில் இருந்து வரும் 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16848), நாகர்கோவிலில் இருந்து வரும் 31-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16340), உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வரும் 29-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16368) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* இதேபோல, கன்னியாகுமரியில் இருந்து வரும் 28-ந் தேதி காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயிலும் (12666), நாகர்கோவிலில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16354) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* நாகர்கோவிலில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16321), மறுமார்க்கமாக கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
* ஈரோட்டில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்ட செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16845). மறுமாா்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16846) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது.
- சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.
சென்னை:
திருச்சி - திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
இது குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), இன்று (வெள்ளிக்கிழமை), 6, 8, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரெயில் நிலையம் செல்லாது.
* கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12666), நாளை (சனிக்கிழமை) மற்றும் 11-ந்தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.
* எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), வரும் 7, 11 ஆகிய தேதிகளில் திருச்சி- மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 7-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.
* எழும்பூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும்.
* நாகர்கோவிலில் இருந்து வரும் 9, 11 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20628), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






