என் மலர்
நீங்கள் தேடியது "சுவாமி வீதி உலா"
- தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
- இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம் என தொடர்ந்து விழா நடந்தது.
தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக காலை 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து மலர் அபிஷேகம் நடைபெற்றது.
அப்போது 4 ஆயிரம் கிலோ மலர்களாகல் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் சமேதராக வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் 4 ராஜா வீதிகளிலும் சாமிகள் வலம் வந்து அதிகாலையில் கைலாசநாதர் கோவி லுக்குள் சென்றடைந்தது.
தொடர்ந்து இன்று மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் தேர் திருவிழா நிறை வடைக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன், கோவில் தலைமை எழுத்தர் பால சுப்பிரமணியம், மற்றும் பணியாளர்கள், அர்ச்ச கர்கள் செய்திருந்தனர்.
- கோயில் மூலவரையே சப்பர பவனியாக எடுத்து வருவதில்லை.
- தனியாக உற்சவ மூர்த்தியான செம்பு விக்ரகங்கள் ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
கோவில்களில் இறைவன் திருவீதியுலா வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. கோவில்களில் திருவிழா நடைபெறும் காலங்களில், கோயில் மூலவரையே சப்பர பவனியாக எடுத்து வருவதில்லை. இதற்கென்று தனியாக உற்சவ மூர்த்தியான செம்பு விக்ரகங்கள் அல்லது பிற உலோகங்களுடன் செம்பு கலந்த விக்ரகங்களை சுமந்து வருகிறார்கள்.

நாம் பயன்படுத்தும் மின்சார வயருக்குள் செம்புக்கம்பி இருக்கிறது. இது மின்சாரத்தை அதிவேகமாக கடத்தி விளக்குகளை எரிய வைக்கிறது, இயந்திரங்களை இயங்க வைக்கிறது. அதுபோல, செம்பு விக்ரகங்களின் அழகு, அப்படியே நம்மை ஈர்த்து பக்தியில் திளைக்க வைக்கிறது.
செம்பைத் தேய்க்க தேய்க்க அதன் பளபளப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறைசக்தி என்னும் மின்சாரம் பக்தனை அடைய அடைய, அவன் பேரின்ப நிலையை விரைவாக அடைகிறான். இதற்காகவே, வீதிகளில் சுவாமி பவனி வருவதை உருவாக்கினார்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்து.

கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் (முதியோர்கள்), கோயிலுக்குச் செல்லக் கூடாதவர்கள் (தீட்டுப்பட்ட பெண்கள்), மரணம் போன்ற தீட்டுப்பட்ட குடும்பத்தினர்கள், நோய், கர்ப்பகாலம், போன்ற பல காரணங்களால் செல்ல இயலாதவர்கள் என பல்வேறு காரணங்களால் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்களும், வணங்க வேண்டும் என்பதற்காகவே உற்சவரான இறைவன் திருவீதியுலா வருகிறார்.
தீட்டு பட்டவர்களும் திருவீதியுலா வருகிற உற்சவரான இறைவனை வணங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உலாவரும் இறைவனுக்கு திருஷ்டியை நிவர்த்தி செய்த பின்பே, மீண்டும் ஆலயத்திற்குள் எழுந்தருளச் செய்வார்கள் எனவே உற்சவர் இறைவனை யார் வேண்டுமானாலும் வணங்கலாம். அதற்கு தடை ஏதும் கிடையாது. அதனால், எந்த பாவமும் நேராது.






