என் மலர்
நீங்கள் தேடியது "Silver Peacock Vehicle"
- தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
- இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம் என தொடர்ந்து விழா நடந்தது.
தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக காலை 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து மலர் அபிஷேகம் நடைபெற்றது.
அப்போது 4 ஆயிரம் கிலோ மலர்களாகல் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் சமேதராக வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் 4 ராஜா வீதிகளிலும் சாமிகள் வலம் வந்து அதிகாலையில் கைலாசநாதர் கோவி லுக்குள் சென்றடைந்தது.
தொடர்ந்து இன்று மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் தேர் திருவிழா நிறை வடைக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன், கோவில் தலைமை எழுத்தர் பால சுப்பிரமணியம், மற்றும் பணியாளர்கள், அர்ச்ச கர்கள் செய்திருந்தனர்.






