என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு"

    • சுற்றுலா பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.
    • இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர்.

    தற்போது இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இவர்களின் பாதுகாப்புக்காக கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.

    வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர் அந்த பகுதிக்கு சென்றாலும் அவர்களது முழு விபரங்களுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் தங்கி இருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்கள், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வைத்திருக்க வேண்டும் என விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில், "கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். வழக்கம் போல் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் நிலவி வருவதால் கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திர ங்கள் அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும்,

    474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திர ங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்களில் 310 எந்திரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள கணினி வழியில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்

    ஈரோடு ஆர்.டி.ஓ. சதிஷ்குமார் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் வழங்கினார்.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ×