என் மலர்
நீங்கள் தேடியது "வங்காநரி"
- 200 ஆண்டுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று, வங்காநரி வழிபாடு நடைபெற்று வருகிறது.
- இதேபோல் நேற்று மாலை சின்னம நாயக்கன்பா ளையம் கிராம மக்கள், வங்காநரி பிடித்துச் சென்று மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி பொங்கல் பண்டிகை நிறைவு செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கொட்டவாடி, சி.என்.பாளையம், ரங்கனுார், சி.கி.புரம், பெ.கி.புரம், தமையனுார் உள்ளிட்ட கிராமங்களில், 200 ஆண்டுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி ஆண்டு தோறும் காணும்
பொங்கலன்று, வங்காநரி
வழிபாடு நடைபெற்று வரு கிறது. காணும் பொங்க லன்று கிராமத்தை யொட்டியுள்ள தரிசு நிலங்களில் வலை விரித்து காத்திருந்தும் கிராம மக்கள் வங்காநரி பிடித்து, தாரை, தப்பட்டை மேள வாத்தியங்கள் முழங்க
கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபடுகின்றனர்.
வங்காநரி, பாது காக்கப்பட வேண்டிய வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்த நரியைப் பிடித்து வழிபாடு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்தது. ஆனாலும் இந்த வழிபாட்டு முறையை கைவிட மனமில்லாத கிராம மக்கள் தொடர்ந்து வங்காநரி வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று முன்தி
னம் கொட்டவாடி கிராம
மக்கள்,வங்காநரி பிடித்து, கிரா மத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலில் வைத்து வழிபாடு நடத்தினர்.
இதேபோல் நேற்று மாலை சின்னம நாயக்கன்பா ளையம் கிராம மக்கள், வங்காநரி பிடித்துச் சென்று மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி பொங்கல் பண்டிகை நிறைவு செய்தனர்.
இது குறித்து தகவ லறிந்த வாழப்பாடி வனத்துறை யினர், வங்காநரிகளை மீட்டு, இதன் வாழ் இடமான தரிசு நிலப்பகுதியில் விட்டனர்.
- சின்னமநாயக்கன் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வங்காநரி ஜல்லிக்கட்டு காண கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
- இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 பேரையும் வாழப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த ரங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 24). இவரது சகோதரர் அரவிந்த்குமார்(20), உறவினர்கள் பூபாலன், ஆனந்த் ஆகிய 4 பேர், சின்னமநாயக்கன் பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வங்காநரி ஜல்லிக்கட்டு காண கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அதிக ஹாரன் சத்தம் ஏற்பட்டதாக, சின்னம நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளை ஞர்கள், அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர்.
இதில் இரு தரப்பின ருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ரங்கனூரைச் சேர்ந்த
சந்தோஷ்குமார், அரவிந்த்கு மார், பூபாலன், ஆனந்த் ஆகிய 4 பேரையும் தாக்கியதாக, சின்னமநாயக்கன்பா ளையம் கிராமத்தைச் சேர்ந்த வைரமணி(31), பிரவீன்கு மார்(28), பிரேம்குமார் (20), வெங்கடேஷ் என்கிற ஜெமினி (19) ஆகிய 4 பேரையும் வாழப்பாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






