என் மலர்
நீங்கள் தேடியது "ஏர்இந்தியா விமானம்"
- அகமதாபாத்-லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டது.
- பாரீசில் இருந்து டெல்லி நோக்கி பயணிக்கக்கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானம் ரத்து செய்யப்பட்டது.
புதுடெல்லி:
அகமதாபாத்-லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை அறிவித்த நிலையில் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் AI-143 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானத்தின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானம் புறப்படுவதற்கு முன்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய விமான ஆய்வின்போது தொழில்நுட்ப கோளாறு ஒன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான பயணிகளுக்கு ஓட்டல் வசதி வழங்கியிருக்கிறோம். பயணம் ரத்துசெய்யப்பட்ட நிலையில் முழு கட்டண தொகையையும் திருப்பித் தரவோ அல்லது பயணிகள் விரும்பினால் மீண்டும் விமான பயணம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தவோ தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து துபாய் செல்லும் AI 915 விமானம், டெல்லியில் இருந்து வியன்னா செல்லும் AI 153 விமானம், டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் AI 143 விமானம், அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் AI 159 விமானம் மற்றும் லண்டனில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் AI 170 விமானம் என 5 விமானங்களின் சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.
இன்று ஒரே நாளில் 5 விமானங்களின் சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
- தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்தது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இன் பயன்படுத்த முடியாது
தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்தது.
இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்தக் கூடாஐ என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
- அனைத்து பயணிகளும் விமான நிலையத்திலும், பயணத்தின் போதும் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
- அனைத்து நுழைவு பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
சீனாவில் ஒமைக்ரானின் புதிய திரிபான பி.எப்.7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஆங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
அனைத்து பயணிகளும் விமான நிலையத்திலும், பயணத்தின் போதும் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து நுழைவு பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும். அதே நேரத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரேண்டம் பரிசோதனை தேவையில்லை என்றும் அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் முப்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ உள்ளிட்ட 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதன்படி, மும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானம் லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- விஸ்தாராவை ஏர்இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு இதில் 25.1 சதவீதம் பங்கு உள்ளது.
- நேற்றுடன் விஸ்தாரா விமான சேவைகள், ஏர்இந்தியா விமான சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
விஸ்தாரா விமான நிறுவனம் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைவதற்கான வேலைகளை நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர்இந்தியா விமானங்களாக சென்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விஸ்தாரா விமானம் டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஸ்டாஃப்கள் ஒன்றாக நின்று விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.
ஏர்இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைந்த பின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு புறப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை இதுவாகும்.
நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏஐ2984 என்ற விமானம் புறப்பட்டது. இது உள்நாட்டிற்கான முதல் விமானம் ஆகும்.
விஸ்தாரா ஏர்இந்தியாவுடன் இணைந்த நிலையில், சிங்கப்பூர ஏர்லைன்ஸ் இதில் 25.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






