என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Airspace"

    • டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது.
    • ஆலங்கட்டி மழையில் சிக்கி குலுங்கிய அந்த விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடுவானில் பறந்தபோது பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி அந்த விமானம் குலுங்கியது. இருப்பினும் அந்த விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    இதற்கிடையே நடுவானில் அந்த விமானம் அவசர நிலையில் சிக்கித் தவித்தபோது, நிலைமையை சமாளிப்பதற்காக விமானி பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதற்கு லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அனுமதி கோரினார். ஆனால் அவசரகால பயன்பாட்டுக்கும் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்த லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி மறுத்துவிட்டது.

    அதன்பின் விமானி மோசமான வானிலைக்கு மத்தியிலும் வழக்கமான வான்வழியிலேயே விமானத்தை பத்திரமாக இயக்கிச் சென்று தரையிறக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.

    • பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.
    • இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் மூண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் அடங்கியது.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தது. இதற்கு போட்டியாக, தனது வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்து பாகிஸ்தான் அறிவித்தது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர்ப்பதற்றம் மூண்டு பேச்சுவார்த்தைக்குப் பின் அடங்கி உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐ.சி.ஏ.ஓ.) விதிகளின் படி, ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், கடந்த மாதம் பாகிஸ்தான் விதித்த தடை மே 23-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அந்த தடையை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.

    • பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
    • தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்தது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இன் பயன்படுத்த முடியாது

    தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்தது.

    இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்தக் கூடாஐ என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    • வரும் வழியில் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தியதாக தகவல்.
    • பாகிஸ்தான் வான்வழியில் சுமார் 46 நிமிடங்கள் பறந்ததாக தெரிவித்தது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் போலாந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இரு நாடுகளுக்கு அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி வரும் வழியில் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தானை சேர்ந்த செய்தி நிறுவனம் இதனை தெரிவித்து இருக்கிறது. எனினும், இது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் சுமார் 46 நிமிடங்கள் பறந்ததாக தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் காலை 10.15 மணிக்கு நுழைந்து காலை 11.01 மணிக்கு வெளியேறியது. சித்ரல் வழியே பாகிஸ்தானில் நுழைந்த விமானம் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் வழியே அம்ரித்சர் வந்துள்ளது.

    ×