என் மலர்
நீங்கள் தேடியது "உயர்கோபுர மின் விளக்கு"
- எம்.பி. எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் நகரில் புதிய பஸ் நிலையம் முதல் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வரையிலும் மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி அருகே உள்ள மேம்பாலத்தில் புதிதாக உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உயர் கோபுர மின்விளக்குகளை திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் செங்கம் மு.பெ.கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், ஏழுமலை, செந்தில்குமார், நகர செயலாளர் அன்பழகன், செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தொண்டி பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- ஏர்வாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் அரசு மற்றும் சுற்றுலா பஸ்களும் இங்கிருந்து செல்கிறது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியானது முதல் நிலை பேரூராட்சி பகுதியாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. இங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சிதம்பரம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளிலிருந்து ஏர்வாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் அரசு மற்றும் சுற்றுலா பஸ்களும் இங்கிருந்து செல்கிறது.
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காகவும், பஸ் நிலைய பகுதியில் குற்றச் ம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையிலும் ஹைமாஸ் எனப்படும் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி எம்.பி. நிதியில் இருந்து ரூ.4½ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- மாணவர்கள் படிப்பில் மட்டும் இல்லாமல், விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- இதில் மன வலிமையோடு செயல்பட்டால் அனைவரும் உலக அளவில் சாதிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், விளையாட்டு விடுதி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில், கால்பந்து, ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்களின் வசதிக்காக உயர் மின்விளக்கு அமைக்க வேண்டும் என, விளையாட்டு விடுதி மாணவர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக செல்லகுமார் எம்.பி. கலந்துக்கொண்டு, புதிய உயர் மின்விளக்கினை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் படிப்பில் மட்டும் இல்லாமல், விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் மன வலிமையோடு செயல்பட்டால் அனைவரும் உலக அளவில் சாதிக்கலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், மாவட்டத் துணைத்தலைவர் சேகர், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் விக்னேஷ், வழக்கறிஞர் அசோகன், ஆடிட்டர் வடிவேல், ஆறுமுகசுப்பிரமணி உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.






