என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் ரூ.3 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்கு
    X

    கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் ரூ.3 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்கு

    • மாணவர்கள் படிப்பில் மட்டும் இல்லாமல், விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    • இதில் மன வலிமையோடு செயல்பட்டால் அனைவரும் உலக அளவில் சாதிக்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், விளையாட்டு விடுதி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில், கால்பந்து, ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இவர்களின் வசதிக்காக உயர் மின்விளக்கு அமைக்க வேண்டும் என, விளையாட்டு விடுதி மாணவர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

    இதன் திறப்பு விழா மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக செல்லகுமார் எம்.பி. கலந்துக்கொண்டு, புதிய உயர் மின்விளக்கினை தொடங்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் படிப்பில் மட்டும் இல்லாமல், விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதில் மன வலிமையோடு செயல்பட்டால் அனைவரும் உலக அளவில் சாதிக்கலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், மாவட்டத் துணைத்தலைவர் சேகர், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் விக்னேஷ், வழக்கறிஞர் அசோகன், ஆடிட்டர் வடிவேல், ஆறுமுகசுப்பிரமணி உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×