என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High tower electric light"

    • எம்.பி. எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் நகரில் புதிய பஸ் நிலையம் முதல் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வரையிலும் மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி அருகே உள்ள மேம்பாலத்தில் புதிதாக உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து உயர் கோபுர மின்விளக்குகளை திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் செங்கம் மு.பெ.கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், ஏழுமலை, செந்தில்குமார், நகர செயலாளர் அன்பழகன், செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டி பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஏர்வாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் அரசு மற்றும் சுற்றுலா பஸ்களும் இங்கிருந்து செல்கிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியானது முதல் நிலை பேரூராட்சி பகுதியாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. இங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சிதம்பரம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளிலிருந்து ஏர்வாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் அரசு மற்றும் சுற்றுலா பஸ்களும் இங்கிருந்து செல்கிறது.

    இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காகவும், பஸ் நிலைய பகுதியில் குற்றச் ம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையிலும் ஹைமாஸ் எனப்படும் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி எம்.பி. நிதியில் இருந்து ரூ.4½ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ×