என் மலர்
நீங்கள் தேடியது "வஉ சிதம்பரனார்"
- வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
- வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
* திராவிட மாடல் அரசில் வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
* வ.உ.சி. பெயரில் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிப்பு.
* கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி.யின் சிலை திறப்பு மற்றும் அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது.
* கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறப்பு.
* வ.உ.சி.யின் 150-வது ஆண்டில் நெல்லை, தூத்துக்குடியில் உருவாகும் அனைத்துக் கட்டடங்களுக்கும் அவரது பெயர் சூட்டல்.
* வ.உ.சி.யின் 85-வது நினைவு நாள் 'தியாகத் திருநாள்'. தூத்துக்குடி மேற்கு பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை எனப் பெயர் மாற்றம்.
* வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி.
* வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை, வ.உ.சி. 150 சிறப்பு மலர் மற்றும் மடிப்பேடு வெளியீடு.
* வ.உ.சி. எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்.
* 1908 திருநெல்வேலி எழுச்சிக்கு நினைவுச் சின்னம் அறிவிக்கப்பட்டது.
தம் உயிரையும் உணர்வையும் தமிழுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் அளித்த தியாகத் திருவுருவான வ.உ.சி. பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. நினைவுநாளில் அவரை வணங்கிப் போற்றுகிறேன். வாழ்க வ.உ.சி.!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்தநாள்.
- ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அ.திமு.க. சார்பில் மரியாதை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்த நாளான 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அ.திமு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, கடம்பூர் ராஜூ, ப. மோகன், சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாளான 5-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
- அ.தி.மு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, ப.மோகன், கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், சின்னத்துரை, சரவண பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, ப.மோகன், கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், சின்னத்துரை, சரவண பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






