என் மலர்
நீங்கள் தேடியது "விற்பனை கண்காட்சி"
- மதுரையில் காந்தி சில்ப் பஜார் விற்பனை கண்காட்சி நடந்தது.
- இலவச அனுமதியுடன் கூடிய இந்த கண்காட்சியில் தினசரி கைவினைக் கலைஞர்களின் நேரடி செயல் விளக்கமும் நடைபெறுகிறது.
மதுரை
மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் அகில இந்திய கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
மதுரையில் இந்திய ஜவுளி துறை, மற்றும் மதுரை "பெட்கிராட் நிறுவனம் இணைந்து 'காந்தி சில்ப் பஜார்' 10 நாட்கள் நடைபெறும் அகில இந்திய கைவினைப் பொருட்களின் விற்பனை கண்காட்சி ராஜா முத்தையா மன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார்.
கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணைய மண்டல இயக்குனர் பிரபாகரன், நாகர்கோவில் காதி கிராப்ட் சேவை மைய உதவி இயக்குனர் ரூப் சந்தர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் காளிதாசன், "பெட்கிராட்" நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு அலுவலர்கள் பிரிட்ஷுதா, ரேவதி, சுனில், மகளிர் உதவி திட்ட அலுவலர் வெள்ளப்பாண்டி மற்றும் "பெட்கிராட்" நிர்வாகிகள் சுருளி, அங்குசாமி, கிருஷ்ணவேணி, சாராள் ரூபி, சுசிலா குணசீலி, மார்ட்டின் லூதர்கிங், ராஜசேகரன், இந்திரா, பயிற்சியாளர்கள் விஜயகுமார், விஜய வள்ளி, முத்துச்செல்வி, ஈஸ்வரி, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த அனைத்து கைவினைக் கலைஞர்கள் தயார் செய்த பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
கண்காட்சியில் 100 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கண்ணாடி பொம்மைகள், மண்பாண்டங்கள், வேலைப்பாடுடன் கூடிய மரச்சிற்பங்கள், சணல் பொருட்கள், பிரிண்டிங் துணி வகைகள், செயற்கை ஆபரண நகைகள், சுங்குடி சேலைகள், ஓலை மற்றும் நார் பொருட்கள், தஞ்சாவூர் கார்பெட்கள், சங்கு பொருட்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இலவச அனுமதியுடன் கூடிய இந்த கண்காட்சியில் தினசரி கைவினைக் கலைஞர்களின் நேரடி செயல் விளக்கமும் நடைபெறுகிறது. மேலும் தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தினசரி பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்படுகிறது. இந்த மாபெரும் கண்காட்சியை கண்டுகளித்து பயன் பெறும் வகையில் இந்திய ஜவுளித்துறை மற்றும் "பெட்கிராட்" நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
- மகளிர் குழு பொருட்கள் விற்பனை கண்காட்சி நடந்தது.
- கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் மற்றும் வண்ணாங்குண்டு ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கைவினைப் பொருட்கள் தயார் செய்து பொதுமக்களுக்கான விற்பனை கண்காட்சி அரங்கம் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ஒவ்வொரு மகளிரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து லட்சி யங்களை திட்டங்களாக வெளி கொண்டு வந்து செயல்படுத்தும்போது நிச்சயம் வெற்றி பெற முடியும்.
ஒவ்வொரு மகளிரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு பகுதியிலும் அதன் சிறப்பு களுக்கு ஏற்பவும், மக்களின் தேவையை அறிந்தும் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் போது பொதுமக்களின் தேவை நிறைவேறுவது மட்டுமின்றி நல்ல வரவேற்பை பெறுவதால், மகளிர் குழுக்களின் பொருளாதார வளர்ச்சியும் உயரும்.
பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு முன்பு மக்களை கவரும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும். அதற்கு போதிய பயிற்சிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார். வண்ணாங்குண்டு ஊராட்சியில் மகளிர் குழு வினர் பலன் தரும் மரம் வடிவில் நின்று பெண்கள் தின விழாவை கொண்டா டினர்.
இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், வேளாண்மை கல்லூரி விஞ்ஞானி முகிலன், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு, தாதனேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் கோகிலா ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பி.ஆர்.ஓ.பாண்டி தொகுத்து வழங்கினார்.
- அனைத்து மாநில சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் மண்டல அளவிலான விற்பனை கண்காட்சி (மதி சாராஸ் மேளா) நடைபெற உள்ளது.
- 1-ந் தேதிக்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 3-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை அனைத்து மாநில சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் மண்டல அளவிலான விற்பனை கண்காட்சி (மதி சாராஸ் மேளா) நடைபெற உள்ளது.
எனவே இந்த மண்டல அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்த விவரங்கள் மற்றும் பொருளின் மாதிரியுடன் வரும் 1-ந் தேதிக்குள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவற்றில் தரமுள்ள பொருட்களை தயார் செய்யும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு சேலம் கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் 207-ம் எண் அறையில் உள்ள மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






