என் மலர்
நீங்கள் தேடியது "ரபடா"
- குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
- அவசரமாக சொந்த நாடு திரும்பினார். இந்த நிலையில் சஸ்பெண்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபடா. இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இதுவரை குஜராத் அணி 10 போட்டிகளில் விளையாடியள்ளது. மீண்டும் அணியில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்த நிலையில் போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் தடை பெற்றுள்ளேன். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவில்லை.
இது தொடர்பாக ரபடா வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் ஏமாற்றிய அனைவருக்கும் நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை நான் ஒருபோதும் அற்பமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த பாக்கியம் என்னை விட மிகப் பெரியது. இது எனது தனிப்பட்ட விருப்பங்களை விட அதிகம். நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டுக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- எம்.ஐ. கேப்டவுன் அணியில் ரஷித்கான், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், காகிசோ ரபடா, டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கேப்டவுன்:
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் லீக் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகளையும் இந்திய தொழிலதிபர்களே வாங்கியுள்ளனர்.
முதலாவது தென்ஆப்பிரிக்க 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கிறது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி எம்.ஐ. கேப்டவுன் அணியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்கள் லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடா, இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தங்கள் அணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக எம்.ஐ. கேப்டவுன் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்சுக்கு சொந்தமான ஜோகன்னஸ்பர்க் அணியில் தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.