என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 கடைகளில்"

    • கருப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம், டோல்கேட் பகுதியில் மளிகை கடைகள், மெடிக்கல் ஷாப், எலக்ட்ரானிக்ஸ் கடை, ஹார்டுவேர் கடைகள் உள்ளன.
    • இதில் 5 கடைகளில் நள்ளிரவில் கொள்ளை நடந்துள்ளது.

    கருப்பூர்:

    சேலம் மாநகரம் கருப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம், டோல்கேட் பகுதியில் மளிகை கடைகள், மெடிக்கல் ஷாப், எலக்ட்ரானிக்ஸ் கடை, ஹார்டுவேர் கடைகள் உள்ளன. இதில் 5 கடைகளில் நள்ளிரவில் கொள்ளை நடந்துள்ளது.

    பணம்-பொருட்கள் திருட்டு

    கடைகளின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம ஆசாமிகள் கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது மற்றும் மளிகை பொருட்கள், செல்போன்கள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை வழக்கம் போல் கடைகளை திறப்பதற்கு வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    சி.சி.டி.வி. காமிராக்கள் காட்சி ஆய்வு

    இதுபற்றிய தகவலின் பேரில் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் கடையில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக கருப்பூர் சுற்று பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

    இதுவரை 63 பவுன் நகை, பணம் திருடு போய் உள்ளன. போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிகளில் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த நகைகள்,பணம், வெள்ளிப் பாத்திரங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.
    • 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ைளயடித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதி களில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சுமார் 4 வீடுகளில் புகுந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த நகைகள்,பணம், வெள்ளிப் பாத்திரங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.

    இந்த பரபரப்பு அடங்கும் முன் மர்மநபர்கள் மீண்டும் 5 கடைகளில் கைவரிைச காட்டி உள்ளனர். நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் ேஜடர்பாளையம் கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு கடையிலும், ஆனங்கூர் மெயின் ரோட்டில் உள்ள 2 மளிகை கடைகளின் ஷட்டரின் பூட்டை உடைத்து ஒரு மளிகை கடையில் ரூ. 10 ஆயிரத்தையும் மற்றொரு மளிகை கடையில் இருந்த பொருட்களையும் மர்ம நபர்கள் அள்ளிக் கொண்டு சென்று விட்டனர். அதேபோல் பிலிக்கல் பாளையத்தில் உள்ள 2 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர்.

    இது குறித்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஜேடர் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ைளயடித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×