search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பூர் அருகே அடுத்தடுத்து 5 கடைகளில் துணிகர கொள்ளை
    X

    கொள்ளை நடந்த கடைகளை படத்தில் காணலாம்.

    கருப்பூர் அருகே அடுத்தடுத்து 5 கடைகளில் துணிகர கொள்ளை

    • கருப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம், டோல்கேட் பகுதியில் மளிகை கடைகள், மெடிக்கல் ஷாப், எலக்ட்ரானிக்ஸ் கடை, ஹார்டுவேர் கடைகள் உள்ளன.
    • இதில் 5 கடைகளில் நள்ளிரவில் கொள்ளை நடந்துள்ளது.

    கருப்பூர்:

    சேலம் மாநகரம் கருப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம், டோல்கேட் பகுதியில் மளிகை கடைகள், மெடிக்கல் ஷாப், எலக்ட்ரானிக்ஸ் கடை, ஹார்டுவேர் கடைகள் உள்ளன. இதில் 5 கடைகளில் நள்ளிரவில் கொள்ளை நடந்துள்ளது.

    பணம்-பொருட்கள் திருட்டு

    கடைகளின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம ஆசாமிகள் கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது மற்றும் மளிகை பொருட்கள், செல்போன்கள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை வழக்கம் போல் கடைகளை திறப்பதற்கு வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    சி.சி.டி.வி. காமிராக்கள் காட்சி ஆய்வு

    இதுபற்றிய தகவலின் பேரில் கருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் கடையில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக கருப்பூர் சுற்று பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

    இதுவரை 63 பவுன் நகை, பணம் திருடு போய் உள்ளன. போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×