என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரஞ்சு தொப்பி"

    • குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
    • நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.

    நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.

    இந்நிலையில், சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நீங்க விளையாடுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு சாய் சுதர்சன். இந்திய ஜெர்சியில் உங்களின் அபார திறமையை காண காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
    • நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

    இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.

    நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.

    லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சனிடம் கடந்த போட்டியில் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கி இருந்தார். தற்போது சாய் சுதர்சன் மீண்டும் ஒரு அரை சதம் அடித்து நிக்கோலஸ் பூரானிடம் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் படுத்தியுள்ளார். தற்போது இருவருக்கும் இடையே 49 ரன்கள் வித்தியாசம் இருக்கின்றது.

    பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் முதல் வீரராக 600 ரன்களை கடந்து ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். #KingsXIPunjab #KLRahul #VIVOIPL #IPL2018

    மும்பை:

    மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்தன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

    இப்போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 94 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 652 ரன்கள் குவித்துள்ளதோடு, ஆரஞ்சு தொப்பியையும் தட்டிச்சென்றார். இந்த சீசனில் 600 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஒரு ஐபிஎல் சீசனில் ராகுல் 600 ரன்கள் எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.



    மேலும் ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 600 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ராகுல் தட்டிச்சென்றார். இந்த சீசனில் இதுவரை ராகுல் ஆறு முறை அரைசதம் அடித்துள்ளார். ராகுல் கடந்த சீசன்களில் விளையாடிய 38 போட்டிகளில் 725 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இந்த முறை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 652 ரன்கள் குவித்துள்ளார். 

    இந்த சீசனில் பேட்டிங்கில் அசத்திவரும் ராகுல் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் 32 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ராகுல் 65 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். #KingsXIPunjab #KLRahul #VIVOIPL #IPL2018
    ×