என் மலர்
நீங்கள் தேடியது "தேர்வுத்துறை"
- செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.
- தனியார் பள்ளி ஒன்றில் தேர்வெழுதிய 148 மாணவ, மாணவிகளில் 91 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த வாரம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் விழுப்புரம் செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.
செஞ்சி ஒன்றியத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 17 பேரும், செஞ்சி அல் ஹிலால் தேர்வு மையத்தில் 35 பேரும் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து உள்ளனர்.
தனியார் பள்ளி ஒன்றில் தேர்வெழுதிய 148 மாணவ, மாணவிகளில் 91 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.
இதனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? என்று விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
- மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதும் இருப்பின் அதன் விவரங்களை இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
- அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பின்பு வழங்கப்படும்.
சென்னை:
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளை மேற்படிப்பு படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவையாக உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பள்ளி தேர்வுத்துறை இயக்குனர் சா.சேது ராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் மதிப்பெண் பட்டியலில் உள்ள தகவல்களை சரிபார்த்து, கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகிக்க வேண்டும்.
மதிப்பெண் பட்டியலில் பிழைகள் ஏதும் இருப்பின் அதன் விவரங்களை இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியலை கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு பின்பு வழங்கப்படும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






