என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளநோட்டு கும்பல்"
- கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர்.
- கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி செல்வன் (வயது 40). இவர் பெருமாள்புரம் ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த 24-ந்தேதி கிரிப்டோ கரன்சி பண பரிவர்த்தனையில் ஏமாற்றப்பட்டதாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது ரியாஸ் (36) என்பவர் மூலம் அறிமுகமான சங்கரன் கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த அய்யாதுரை (37), மதுரையை சேர்ந்த இசக்கிமுத்து (28) ஆகியோர் தங்களுக்கு அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி தேவைப்படுவதாக கூறி ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினார். அதில் ரூ.75 லட்சம் மதிப்பில் சுமார் 82 ஆயிரத்து 691 அமெரிக்க டாலர் கிரிப்டோகரன்சியை முகமது ரியாஸின் மின்னணு பணப்பைக்கு (எலக்ட்ரானிக் வேலட்) மாற்றம் செய்து அதற்கான பணம் ரூ.75 லட்சத்தினை ஆண்டனியிடம் கொடுத்துள்ளனர். அவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவுபடி தனிப்படை திண்டுக்கல், பழனி மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரியாஸ், அய்யாதுரை மற்றும் இசக்கி முத்து ஆகியோர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.
புகார் குறித்து விசாரணையை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததுடன், முகமது ரியாஸ் மின்னணு பணப்பையில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான 82691 அமெரிக்க டாலருக்கு இணையான கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை கமிஷனர் பாராட்டினார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தூத்துக்குடியில் அடிக்கடி இத்தகைய மீட்புகள் நடக்கிறது. நெல்லையில் இதுதான் முதல் முறை. மோசடி செய்த முகமது ரியாஸ் தனது வாலட்டில் அதை வைத்திருந்ததால் எளிதாக பறிமுதல் செய்ய முடிந்தது.
கிரிப்டோகரன்சி குற்ற வழக்குகளில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி மீட்கப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த வகையான கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக லாப வாக்குறுதிகள் அளித்து முதலீடு செய்யுமாறு அழைப்பவர்களை நம்ப வேண்டாம். நம்பகமான நிறுவனம் மற்றும் சட்டப் பூர்வமான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றனர்.
கோவை வேலாண்டிபாளையத்தில் அறை எடுத்து கோடிக்கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் அச்சடித்த ஆனந்த், கிதர் முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காரமடையை சேர்ந்த சுந்தர்(38) என்பவர் இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரது செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தி தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.
ஆனால் சுந்தர் போலீசாரிடம் சிக்காமல் நேற்று மாலை கோவை 7-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் பாண்டி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சுந்தர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைதான ஆனந்த் கள்ள நோட்டுகளை அச்சடிக்க அறை மட்டுமே எடுத்து கொடுத்தேன். இதற்காக எனக்கு குறிப்பிட்ட தொகை தந்தார்கள். வேறு எதுவும் எனக்கு தெரியாது என கூறி இருந்தார். இதேபோல கிதர் முகமதுவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, சுந்தருக்கு தான் எல்லாம் தெரியும். அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை மார்க்கெட் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புழக்கத்தில் விட்டது தான் எனது வேலை, வேறு எதுவும் தெரியாது என கூறினார். கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஏஜெண்டுகள் குறித்து விசாரித்த போது கிதர்முகமது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
கும்பல் தலைவன் சுந்தருக்கு சர்வதேச அளவில் கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்மூலம் நவீன காகிதங்களை வட மாநிலங்களில் இருந்து வர வழைத்து கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்து 4 மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர். நக்சல்கள், மாவோயிஸ்டுகளுக்கும் கள்ள நோட்டுகளை சப்ளை செய்துள்ளதாக தகவல்கள் பரவியது.
இந்த கும்பல் இதுவரை எவ்வளவு கள்ள நோட்டுகளை அச்சடித்தார்கள்? யார்-யார் மூலமாக அவற்றை புழக்கத்தில் விட்டார்கள்? எந்தெந்த இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டது? இவர்களின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்று விசாரணை நடத்த சுந்தர் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
3 பேரையும் காவலில் எடுத்து தனித்தனியாக விசாரித்தால் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் கருதுகின்றனர். இதற்காக கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.






