என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் மதிப்பெண்"

    குஜராத் மாநிலத்தின் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில், 50 மதிப்பெண் கொண்ட தேர்விற்கு, 80 மதிப்பெண் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ExamMarks
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் கல்வி வாரியத்தால் இந்த ஆண்டின் முற்பகுதியில் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. கணித தேர்வுக்கு மொத்த மதிப்பெண்களே 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மாணவர் ஒருவர் கணிதத் தேர்வில் 80 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தாலும், கூடுதல் மதிப்பெண் கிடைத்ததற்காக மகிழ்ந்தார்.
     
    இதற்கிடையே, இதுகுறித்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தும்படி மாநில கல்வித்துறை உத்தரவிட்டது.  விசாரணையில், அந்த மாணவனுக்கு தவறுதலாக 80 மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. உண்மையில், அந்த மாணவர் பெற்றது வெறும் 8 மதிப்பெண் மட்டுமே.

    இதேபோல், 12-ம் வகுப்பு தேர்வுகளின் போதும் தவறான பதிலுக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. 

    ஆசிரியர்களின் இத்தகைய செய்கையால் மாநில கல்வி வாரியம் எரிச்சல் அடைந்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தலில், இதுபோன்ற குளறுபடிகளை செய்தது தொடர்பாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் தேர்வுக்கே வராத 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய பீகார் கல்வித்துறை  மாணவர்கள், பெற்றோரின் அதிருப்திக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. #ExamMarks
    பீகாரில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #Bihar #GeneralExam
    பீகார்:

    பீகார் பள்ளி தேர்வு வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது. அதில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலருக்கு தாங்கள் எழுதிய தேர்வின் மொத்த மதிப்பெண்ணைக் காட்டிலும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

    இந்த சம்பவம் குறித்து பீகாரில் அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பீம் குமார் கூறுகையில், “கணித பாடத்திற்கு மொத்த மதிப்பெண் 35. ஆனால் நான் 38 மதிப்பெண் பெற்றுள்ளதாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. காரணம் இது போன்று நீண்ட காலமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

    இதேபோல் கிழக்கு சாம்பரனிலிருந்து மாணவர் சந்தீப் ராஜ் கூறுகையில், ‘இயற்பியல் பாடத்திற்கு மொத்த மதிப்பெண் 35. நான் 38 மதிப்பெண் பெற்றுள்ளேன். இது எப்படி சாத்தியமாகும்’ என்று தெரிவித்தார். இதுபோல் தர்பாங்கா பகுதியைச் சேர்ந்த ராகுல்குமார் 35 மதிப்பெண்ணுக்கு எழுதிய கணித தேர்வில் அவருக்கு 40 மதிப்பெண்களை பீகார் மாநில பள்ளி தேர்வு வாரியம் வழங்கியுள்ளது.

    மேலும் தேர்வுக்கே வராத மாணவர்கள் சிலருக்கு கூட மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் பள்ளி கல்வி வாரியத்தின் இந்த குளறுபடி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    ×