என் மலர்
நீங்கள் தேடியது "பிரிட்டிஷ் ஏர்வேஸ்"
- இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு விமானம் புறப்பட்டது.
- அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்தனர்.
புக்காரெஸ்ட்:
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், நடுவானில் சென்றபோது விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதில் 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த இந்திய தம்பதியரின் குழந்தை அழுததால் அவர்களை விமான ஊழியர்கள் கடுமையாக திட்டி கீழே இறக்கிவிட்டுள்ளனர். #BritishAirways
புதுடெல்லி:
லண்டனில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி பெர்லின் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐஇஎஸ் அதிகாரியின் குடும்பத்தினர் பயணம் செய்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்பட்ட போது, அவர்களின் 3 வயது குழந்தை இருக்கையில் சரியாக அமர முடியாமல் அழத் தொடங்கியது. உடனே விமான ஊழியர் ஒருவர், குழந்தையை மிரட்டி இருக்கையில் உட்காரும்படி கூறியுள்ளார். இதனால் பயந்துபோன குழந்தை, இன்னும் அதிகமாக கதறி அழத் தொடங்கியது.
குழந்தையை தாய் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைக்க முயன்றுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு இந்திய குடும்பத்தினரும் குழந்தைக்கு பிஸ்கெட் கொடுத்து அழுகையை நிறுத்த முயன்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி, இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபுவுடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், விமான ஊழியர் தங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் திட்டியதாகவும் கூறியுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எந்த வகையான இனப் பாகுபாட்டையும் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். #BritishAirways
லண்டனில் இருந்து கடந்த மாதம் 23-ம் தேதி பெர்லின் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐஇஎஸ் அதிகாரியின் குடும்பத்தினர் பயணம் செய்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்பட்ட போது, அவர்களின் 3 வயது குழந்தை இருக்கையில் சரியாக அமர முடியாமல் அழத் தொடங்கியது. உடனே விமான ஊழியர் ஒருவர், குழந்தையை மிரட்டி இருக்கையில் உட்காரும்படி கூறியுள்ளார். இதனால் பயந்துபோன குழந்தை, இன்னும் அதிகமாக கதறி அழத் தொடங்கியது.
குழந்தையை தாய் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைக்க முயன்றுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு இந்திய குடும்பத்தினரும் குழந்தைக்கு பிஸ்கெட் கொடுத்து அழுகையை நிறுத்த முயன்றுள்ளனர்.
இதற்கிடையே விமானம் ஓடுபாதையை நெருங்கியது. அப்போதும் குழந்தை அழுதுகொண்டிருந்ததால், மீண்டும் அங்கு வந்த விமான ஊழியர், விமானத்தை டெரிமினலுக்கு திரும்பும்படி கூறியுள்ளார். அங்கு சென்றதும், இந்திய அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை கீழே இறக்கிவிட்டுள்ளனர். அத்துடன், அவர்களுக்கு உதவி செய்த மற்றொரு இந்திய குடும்பத்தினரையும் கீழே இறக்கிவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி, இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபுவுடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், விமான ஊழியர் தங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் திட்டியதாகவும் கூறியுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எந்த வகையான இனப் பாகுபாட்டையும் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். #BritishAirways
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து, சாம்பியன் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பிரத்யேக வாழ்த்து தெரிவித்துள்ளது. #BritishAirways #WorldCup
லண்டன்:
ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்து, குரோசியா மற்றும் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் மோத உள்ளன. இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 14-ம் தேதி இரவு நடக்க உள்ள இறுதிப்போட்டியில் நிச்சயமாக இங்கிலாந்து விளையாடும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பிரத்யேக வாழ்த்தை தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு 15-ம் தேதி அணி வருகிறது என்பதை குறிக்கும் வகையில் போர்டிங் பாஸ் வடிவிலான அந்த வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.






