என் மலர்
நீங்கள் தேடியது "நேரடி பேச்சு"
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
- இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச தாக்குதலை நிறுத்த வேண்டும்.
காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா தனது அசுர தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது.
பாகிஸ்தானும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி விட்டு உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து , அமெரிக்க நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடத்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இரு நாடுகளின் ராணுவ மோதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மையில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். எனவே உடனடியாக பதற்றத்தை தணிக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச தாக்குதலை நிறுத்த வேண்டும்.
நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விரைவான மற்றும் நீடித்த ராஜதந்திர தீர்வுக்கு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.
இரு நாடுகளும் உடனடியாக தாக்குதலை நிறுத்தி விட்டு அமைதி திரும்புவதற்காக நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தூதரக ரீதியாக தீர்வு காண தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்கள், உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின.
அதைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து அங்கு 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நீடிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தலீபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. அதை இப்போது ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் உறுதி செய்து உள்ளார்.
தற்போது துருக்கியில் உள்ள அவர் இதுபற்றி கூறுகையில், “கத்தார் நாட்டில் தலீபான் அரசியல் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடி பேச்சு நடத்தினார்கள். இதில் வேறு எந்த தரப்பினரும் பங்கேற்கவில்லை. இப்போது இந்த பேச்சு வார்த்தை அடிமட்ட அளவில் உள்ளது. இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையை படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, “பேச்சு வார்த்தை உயர் மட்டத்தில் நடைபெறுகிறபோது, நாங்கள் உடன்பாட்டை எட்ட முடியும். தலீபான்களும், அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்” என்றார்.
ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சு நடத்த மறுத்தது பற்றி கேள்வி எழுப்பியபோது, “தலீபான்களின் போர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரானது அல்ல. அது அமெரிக்காவுக்கு எதிரானது” என பதில் அளித்தார்.
இந்த தகவல்களை பாகிஸ்தானின் ‘தி டெய்லி டைம்ஸ்” ஏடு வெளியிட்டு உள்ளது.






