என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதித்தமிழர் பேரவை"

    • பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
    • அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

    அவினாசி:

    தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.

    இந்தநிலையில் பீகார் தேர்தலின்போது, பீகார் மக்கள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுவதாக பொய் பிரசாரம் செய்ததாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கருப்புக்கொடி காட்ட இணை பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வம் தலைமையில் சிலர் தயாராகி வந்தனர்.

    இதையறிந்த அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.

    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதி தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவையினர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கையால் மலம் அள்ளும் தடை சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அனைத்து சலுகைகள் வழங்க வேண்டும். கேரளாவில் பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை நீக்க பயன்படுத்தும் முறையை தமிழகத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

    அரசு வேலை வாய்ப்புகளில் துப்புரவு பணிகளை மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர்.
    ×