search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகை
    X

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை ஆதித்தமிழர் பேரவையினர் முற்றுகை

    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதி தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திண்டுக்கல்:

    5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவையினர் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கையால் மலம் அள்ளும் தடை சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அனைத்து சலுகைகள் வழங்க வேண்டும். கேரளாவில் பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை நீக்க பயன்படுத்தும் முறையை தமிழகத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும்.

    அரசு வேலை வாய்ப்புகளில் துப்புரவு பணிகளை மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர்.
    Next Story
    ×