என் மலர்
நீங்கள் தேடியது "பிரதமர் இல்லம்"
- 10 ஆண்டுகள் நிறைவையொட்டி பயனாளிகள் இன்று பிரதமரின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது
- இதன்பிறகு அந்த வாலிபர் தனது மாத வருமானம் ரூ.2.5 லட்சம் என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று முத்ரா யோஜனா பயனாளிகளுடன் கலந்துரையாடினார். முத்ரா யோஜனாவின் பயனாளிகள் பிரதமரின் இல்லத்தில் அழைக்கப்பட்டனர்.
முத்ரா யோஜனாவின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி பயனாளிகள் இன்று பிரதமரின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பயனாளிகளிடம் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன் போது, பிரதமர் நரேந்திர மோடி ஒரு பயனாளியிடம், உங்கள் வருமானம் என்ன என்று கேட்டார். பிரதமர் மோடியின் இந்தக் கேள்வியால் பயனாளி தயங்கினார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "நிதியமைச்சர் என் அருகில் அமர்ந்திருக்கிறார், நான் அவரிடம் சொல்கிறேன். பயப்படாதீர்கள். வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்" என்று கிண்டலாக கூறினார். இதைக் கேட்டு அனைத்து பயனாளிகளும் சிரித்தனர். இதன்பிறகு அந்த வாலிபர் தனது மாத வருமானம் ரூ.2.5 லட்சம் என்று தெரிவித்தார்.
முத்ரா திட்டம் பின்தங்கிய குறு நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்கீழ் ரூ.10 லட்சம் வரை அந்நிறுவங்களக்குக்கு கடன் வழங்கப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் நேற்று டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
‘‘பிரதமர் இல்லத்தில் கவர்னர் மாளிகைகள் உள்ளன. அங்கு ஆடம்பரங்கள் தலைவிரித்தாடுகின்றன. நமது மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு செலவிட பணம் இல்லை. அதே நேரத்தில் நம்மை ஆள்பவர்கள் வாழ்வதற்காக பணம் செலவழிக்கப்படுகிறது.
இத்தகைய நிலை இருந்தால் மக்கள் எப்படி வாழமுடியும். பிரதமர்களின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்கு ரூ.65 கோடி செலவிடப்பட்டுள்ளது. சபாநாயகரின் செலவுக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செலவினங்களை குறைக்க திட்டம் தீட்டப்படும்.
நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. இஸ்லாமாபாத்தில் 3 படுக்கை அறை கொண்ட ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன். பான்சுலாவில் உள்ள எனது வீட்டில் தான் தங்க நினைத்தேன். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு துறை தெரிவிக்கிறது.

பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அதில் கிடைக்கும் பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். கவர்னர் மாளிகைகள் அனைத்தும் எளிமையாக்கப்படும். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும்.
நாடுமுழுவதும் செய்யப்படும் அனாவசிய செலவை குறைக்க டாக்டர் இஷ்ரத் உசேன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசு பணம் மக்கள் நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்பதில் எனது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது’’ என்றார். #PakistanPM #ImranKhan






