என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமாவளவன் பிறந்த நாள்"

    திருமாவளவன் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகரில் 7 நாட்களில் 5 ஆயிரம் பனைமர விதைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்டனர்.
    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேசம் காப்போம் என்ற பெயரில் 1 லட்சம் பனைமர விதைகள் நடும் பணி கடந்த 17-ந்தேதி முதல் தொடங்கியது. 

    திருச்சி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 17-ந்தேதி பழைய சுற்றுலா மாளிகை காலனி அருகில் இதன் தொடக்க  விழா மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் கே.என்.அருள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு பகுதி வாரியாக நடைபெற்றது. ஏர்போர்ட், ஜங்ஷன், தில்லைநகர், ஸ்ரீரங்கம், பாலக்கரை என அனைத்து பகுதிகளிலும் சாலையோ ரங்கள், வாய்க்கால் ஓரங்களில் பனைமர விதைகள் நடப்பட்டன. 7-வது நாளாக 25-ந்தேதி மலைக்கோட்டை பகுதியில் திருச்சி மாநகர் இலக்கான 5 ஆயிரம் பனைமர விதை நடும் இலக்கு எட்டப்பட்டது. 

    மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை தலைவர்  ந.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள், அச்சு ஊடக மைய பிரிவு துணை செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட பொருளா ளர் சந்தனமொழி, தொகுதி செயலாளர் கனியமுதன் மற்றும்நிர்வாகிகள் லாரன்ஸ், வெற்றிச்செல்வன், ஆல்பர்ட், பன்னீர் செல்வம், காந்திமார்க்கெட் செல்வக் குமார், முடியரசு, ராஜா, ராதா, குணா, ஜான்,தங்கராஜ், முருகன், செந்தில், இருசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    காவிரி ஆற்றின் கரைகளில் நடப்படும் இந்த பனைமர விதைகள் எதிர்காலத்தில் வெள்ளக்காலங்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கும்  என நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த 7 நாட்களில் திருச்சி மாநகரில் 5 ஆயிரம் பனைமர விதைகள் நடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தெரிவித்தார்.
    திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு பஸ் நிறுத்தத்தில் வைத்திருந்த விடுதலை சிறுத்தை கட்சி பேனரை எரித்தவர் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி இவரது மகன் கண்ணன் வயது (47) இவர் கடந்த 17 ந் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு தனது ஊரில் பஸ் நிறுத்தத்தில் திருமாவளவனை வாழ்த்தி இலையூர் கடைவீதி அருகே டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்.  

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டிஜிட்டல் பேனரை யாரோ மர்மநபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இது குறித்து கண்ணன் ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்ததில் அதே பகுதி செம்மண்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராமர் மகன் ராமமூர்த்தி (21) எரித்தது தெரியவந்ததை அடுத்து அவர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.
    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் 56-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 25 வி.சி.க. பொறுப்பாளர்கள் ரத்ததானம் செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்  திருமாவளவனின் 56-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து 25 வி.சி.க. பொறுப்பாளர்கள் ரத்ததானம் செய்தனர்.  

    அதன்பின்னர் அக்கட்சியின் ஊடகப்பிரிவு சுந்தர் தலைமையில் உள்நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் என 100 நபர்களுக்கு  இலவசமாக பிரட், மற்றும் வேட்டி, சேலைகள், வழங்கினர்.  

    அதனை தொடர்ந்து திருச்சி -சிதம்பரம் சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாரதி முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் காமராஜ் லோகநாதன், சிவா சக்கராயுதம், சின்னராசா, குமாரவேல், ராஜா, கருணா, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மருத்துவமனை டாக்டர் ரவிசங்கர் தலைமையில், டாக்டர் மோகன் அரியலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர் ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தினை கொண்டு சென்றனர். 
    ×