என் மலர்
நீங்கள் தேடியது "விமான எந்திர கோளாறு"
- விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
- விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு இன்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
104 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 109 பேர் இருந்தனர். ஓடு பாதையில் ஓடத் தொடங்கியபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் எந்திர கோளாறை சரிசெய்ததும் பின்னர் மதியம் 12 மணிக்கு விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.50 மணிக்கு குவைத் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 166 பயணிகள் உள்பட மொத்தம் 172 பேர் விமானததில் இருந்தனர்.
ஓடு பாதையில் சிறிது தூரம் விமானம் சென்ற போது எந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.
உடனடியாக விமானத்தை மேலும் இயக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தினர். இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இழுவை வண்டிகள் மூலம் விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே இழுத்து வந்து நிறுத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த 172 பேரும் தப்பினர். #ChennaiAirport






