என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிஞர் அண்ணா பிறந்தநாள்"

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு முடிவு ஏற்படும் என்று அண்ணா பிறந்த நாள்விழா பொதுகூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். #OPanneerselvam
    பொன்னேரியில் நடந்த அண்ணா பிறந்த நாள்விழா பொதுகூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:-

    தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சதியை முறியடித்து 27 ஆண்டுகாலம் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில்முத்திரை பதித்தவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தான்.அ.தி. மு.க.வை இந்தியாவின் மூன்றா வது பெரிய கட்சி யாக உயர்த்திய பெருமை ஜெயலலிதாவை சேரும்.

    காவிரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழர்களின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றும் அரசாக அம்மாவின் அரசு உள்ளது.

    அ.தி.மு.க. அரசு சட்ட போராட்டம் நடத்தி தான் காவிரியில் தன் உரிமையை நிலைநாட்டியது. டி.டி.வி. தினகரன் என்ன செய்வார் என எனக்கு தெரியும். அவர் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டு பாண்டிச்சேரியில் இருந்தவர். அவர்களது குடும்ப உறுப்பினர் 16 பேரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார்.


    இப்போது ஆட்சியை கலைக்க தினகரன் வெறிகொண்டு பேசிவருகிறார். இருபது ரூபாய் நோட்டில் சீல் அடித்து பத்தாயிரம் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி ஜெயித்தார்.

    தற்போது மக்கள் பத்தாயிரத்தை கேட்டு தமிழகம் முழுவதும் 20 ரூபாய் நோட்டை யாரும் வாங்குவதில்லை. திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலில் தினகரனுக்கு முடிவு வரும். எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆன்மா கட்சியை வழி நடத்தும்.

    தெய்வீக சக்தி அ.தி.மு.க.வில் உள்ளது.கட்சியில் ஜனநாயகம் உள்ளது. எந்த சக்தியும் அ.தி.மு.க.வை மத்தியிலோ மாநிலத்திலோ ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #OPanneerselvam
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #edappadipalaniswami
    காஞ்சீபுரம்:

    அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை 30 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி காட்டினோம். மக்கள் கூட்டம் அலைமோதியதை பொறுக்க முடியாத எதிர் கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிகொண்டு வருகிறார்கள்.

    வரும் 22-ந்தேதி கன்னியா குமரியிலும், வரும் 30-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நிறைவு விழா நடக்க இருக்கிறது. அப்போது அ.தி.மு.க.வின் வலுவினை நாட்டுமக்களும், எதிர்கட்சியினரும் அறிந்துகொள்வார்கள்.

    கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்யும் அளவிற்கு விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க.வினர்.

    நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா இருக்கும்போது எப்படி வெற்றியை தந்தீர்களோ அதே போல் தொண்டர்கள் தங்கள் முழு திறமையும் பயன்படுத்தி முழு வெற்றியை தரவேண்டும்.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார் என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் அவர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று ஆறுதல் கூறி வருகின்றார்,

    தி.மு.க.வினர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கொடுக்காமல் அதன் உரிமையாளரையே அடிக்கின்றனர். வேலூரில் ஒரு செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு அவரையே அடிக்கின்றனர். ஒரு அழகு நிலையத்தில் தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்ளே சென்று ஒரு பெண்ணை அடித்து உதைக்கிறார். எதிர்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளும் கட்சியாக வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அ.தி.மு.க.வில் மட்டும் தான் நேர்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். அப்படிப்பட்டவர்கள் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.

    தி.மு.க.வில் தான் வாரிசு அரசியல் உள்ளது, அ.தி.மு.க. சாமானிய தொண்டர்களுக்கான கட்சி, இங்கு விசுவாசத்துடன் உழைப்பவர்கள் உயர் பதவிக்கு வருவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவில் வெற்றியை ஏற்படுத்தி தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜா பாத் பா.கணேசன் வெள்ளியிலான விநாயகர் சிலை மற்றும் வெள்ளி வீரவாளினை பரிசாக வழங்கினார். #edappadipalaniswami
    அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, 128 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். #EdappadiPalaniswami
    சென்னை:

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டும் வழங்கப்பட்டும் வருகின்றன.

    மேலும் சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின்போது முதல்-அமைச்சர் அறிவித்ததையொட்டி, தடய அறிவியல் துறை அறிஞர்களுக்கும் இந்த ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல், முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும்;

    சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும்; ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் பிரிவு தலைவர் வரையிலான 5 அலுவலர்களுக்கும்; விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும்;

    தடய அறிவியல் துறையில் துணை இயக்குனர் ஒருவருக்கும் என மொத்தம் 128 பேருக்கு, அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் “மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர்களின் பதவிக்கு ஏற்றவாறு, பதக்க விதிகளின்படி ஒட்டு மொத்த மானியத் தொகையும், வெண்கல பதக்கமும் அளிக்கப்படும். பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவற்றை முதல்-அமைச்சர் வழங்குவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami
    ×