என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166032"

    • இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • கலெக்டர் உத்தரவுப்படி, ரஞ்சித் அர்ஜூனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை 2-வது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்அர்ஜூன் (வயது 27). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதையடுத்து இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி, ரஞ்சித் அர்ஜூனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
    • லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் சாரம் விநியோகம் இருக்காது.


    திருச்சி:


    திருச்சி மாவட்டம் முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.அசோக்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருப்பதால்

    இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர்புதூர்,

    மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் சாரம் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    திருச்சி வழியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு குளு, குளு வசதியுடன் புதிய ரெயில் வருகிற 2-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    திருச்சி:

    ராமேசுவரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு குளு, குளு வசதி கொண்ட ஹம்சபார் எக்ஸ்பிரஸ் புதிய வாராந்திர ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளை கொண்டது. முன்பதிவு டிக்கெட் வினியோகம் மட்டுமே உண்டு. முன்பதிவில்லா டிக்கெட் வினியோகம் கிடையாது. அஜ்மீர் ரெயில் நிலையத்தில் நேற்று தொடக்க விழாவில் அங்கிருந்து ரெயில் வழியனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த ரெயில் திருச்சி வழியாக நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ராமேசுவரத்தில் வழக்கமான சேவை இயக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் (வ.எண் 19604) இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 11.25 மணிக்கு அஜ்மீர் சென்றடையும்.

    இதேபோல அஜ்மீரில் இருந்து ராமேசுவரத்திற்கு வழக்கமான சேவை வருகிற 6-ந்தேதி முதல் தொடங்குகிறது. அஜ்மீரில் இருந்து சனிக்கிழமை தோறும் (வ.எண் 19603) இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரத்திற்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் மானாமதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், குண்டூர், நெல்லூர், விஜயவாடா, வாராங்கல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு வரும் போது திருச்சிக்கு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்படும். சென்னைக்கு காலை 8.50 மணிக்கு சென்றடைந்து காலை 9.05 மணிக்கு புறப்படும். அஜ்மீரில் இருந்து ரெயில் வரும் போது திருச்சிக்கு திங்கட்கிழமை இரவு 8.20 மணிக்கு வந்து இரவு 8.30 மணிக்கு ராமேசுவரத்திற்கு புறப்பட்டு செல்லும்.

    இந்த புதிய ரெயிலானது திருச்சியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை போன்றதாகும். அஜ்மீரில் புகழ் பெற்ற தர்காவும், கோட்டையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ராமேசுவரம்-அஜ்மீர் புதிய ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள சிறுகமணியில் பொதுப்பணித்துறை அதிகாரி சென்ற கார் மோதி பேருந்துக்காக நின்ற 3 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Trichy
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள சிறுகமணி அக்ரஹாரம் பேருந்து நிலையத்தில் இன்று மாலை பேருந்துக்காக பலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வேகமாக வந்த கார் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதனை அடுத்து, காரை ஓட்டி வந்த நபர் ஓட்டம் பிடித்தார்.

    விபத்தில் 3 கட்டிட தொழிலாளர் பெண்கள் பலியானதாகவும், 4 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் தயாளுகுமார் குடிபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். 
    ×