என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் மாயம்"

    கோவை மத்திய சிறையில் வேலை பார்த்த ஆயுதப்படை ஏட்டு திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 46).

    மத்திய ஆயுதப்படை தலைமை காவலரான (சி.ஆர்.பி.எப்.) இவர் கடந்த 2 வருடங்களாக கோவை மத்திய சிறையில் வேலை பார்த்து வருகிறார்.

    சிறை வளாகத்தில் உள்ள பட்டாலியன் முகாமில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்ததும் குளிப்பதற்காக சென்ற அண்ணாதுரை அதன் பிறகு முகாமுக்கு திரும்ப வில்லை.

    வெகுநேரமாகியும் அண்ணாதுரையை காணாததால் சந்தேகமடைந்த சகஊழியர்கள் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அண்ணாதுரையை தேடி வருகின்றனர்.

    ஐகோர்ட்டில் பாதுகாப்புக்கு சென்ற மத்திய பாதுகாப்பு படை வீரர் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள சென்னை துறைமுக பொறுப்பு கழக குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபேஸ். ஜெய்ப்பூரை சேர்ந்த இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக உள்ளார். சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று முன்தினம் பாதுகாப்பு பணிக்கு சென்ற பிரபேஸ் பின்னர் திரும்பிவரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×