என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை மத்திய சிறையில் வேலை பார்த்த ஆயுதப்படை ஏட்டு திடீர் மாயம்
Byமாலை மலர்5 Nov 2018 4:14 AM GMT (Updated: 5 Nov 2018 4:14 AM GMT)
கோவை மத்திய சிறையில் வேலை பார்த்த ஆயுதப்படை ஏட்டு திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 46).
மத்திய ஆயுதப்படை தலைமை காவலரான (சி.ஆர்.பி.எப்.) இவர் கடந்த 2 வருடங்களாக கோவை மத்திய சிறையில் வேலை பார்த்து வருகிறார்.
சிறை வளாகத்தில் உள்ள பட்டாலியன் முகாமில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்ததும் குளிப்பதற்காக சென்ற அண்ணாதுரை அதன் பிறகு முகாமுக்கு திரும்ப வில்லை.
வெகுநேரமாகியும் அண்ணாதுரையை காணாததால் சந்தேகமடைந்த சகஊழியர்கள் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அண்ணாதுரையை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X