என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்"
தன் மீதான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MaFoiPandiarajan #HighCourt
சென்னை:

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜனும் திமுக சார்பில் நாசரும் ஆவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டனர்.
அந்த தேர்தலில் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார். இந்த வெற்றி எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்திற்கு பின்னர் மாஃபா பாண்டியராஜன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #MaFoiPandiarajan #HighCourt
தமிழ்நாட்டில் நக்சலைட்கள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #MinisterPandiyarajan
சென்னை:
தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பயங்கரவாதம் இல்லை. தமிழகத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது எப்படி பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டதோ, அதேபோல் தற்போதும் ஒடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி உள்பட அ.தி.மு.க. அரசின் சாதனைகளை தி.மு.க.வால் எதிர்கொள்ள முடியவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் எந்தவிதமான தீர்ப்பு வந்தாலும் அதை தமிழக அரசு எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளார். #MinisterPandiyarajan






