என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்"

    • நாம் ஒற்றுமையாக இருந்தால், யாரும் நம்மை தீய நோக்கத்துடன் பார்க்கத் துணிய மாட்டார்கள்.
    • வெறுப்பும் விரோதமும் நமது இயல்பில் இல்லை.

    புதுடெல்லி:

    காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கூறியதாவது:-

    பகல்காமில் நடந்த தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களிடம் பயங்கரவாதிகள், அவர்களின் மதத்தைப் பற்றி கேட்ட பிறகு கொன்று உள்ளனர்.

    இந்துக்கள் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டார்கள். இந்த போர் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலானது. எங்கள் இதயங்களில் வலி இருக்கிறது. நாங்கள் கோபமாக இருக்கிறோம். ஆனால் தீமையை அழிக்க, வலிமை காட்டப்பட வேண்டும். இதுபோன்ற துயரங்களைத் தடுக்கவும், தீங்கிழைக்கும் நோக்கத்தைத் தடுக்கவும் சமூகத்திற்குள் ஒற்றுமை அவசியம்.

    நாம் ஒற்றுமையாக இருந்தால், யாரும் நம்மை தீய நோக்கத்துடன் பார்க்கத் துணிய மாட்டார்கள். வெறுப்பும் விரோதமும் நமது இயல்பில் இல்லை. ஆனால், தீங்குகளை அமைதியாக சகித்துக்கொள்வதும் இல்லை. உண்மை யிலேயே வன்முறையற்ற ஒருவர் வலிமையானவராகவும் இருக்க வேண்டும். தேவைப்படும்போது அது புலப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அயோத்தி விவகாரத்தில் தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானதாகும் என குறிப்பிட்டுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ராமர் கோவில் கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். #MohanBhagwat #AyodhiIssue
    மும்பை:

    ராமரின் ஜென்மபூமியாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் முன்பு எப்போதுமில்லாத வகையில் முனைப்பு காட்டி வருகின்றன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாது. இந்து மக்கள் பொறுமையிழந்து, கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.

    எனவே, அவசர சட்டத்தின் மூலம் ராமர் கோவிலை கட்டுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை பணிய வைப்பதற்காக அயோத்தி நகரில் இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ள ‘தர்மசபா’ ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது.



    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானதாகும் என குறிப்பிட்ட மோகன் பகவத், இதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
    #MohanBhagwat #AyodhiIssue
    ×