என் மலர்
நீங்கள் தேடியது "இந்து மகாசபை கட்சி"
மகாத்மா காந்தி உருவப்படத்தை அவமதிப்பு செய்த இந்து மகாசபை கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடன்குடி:
மகாத்மா காந்தி உருவப்படத்தை அவமதிப்பு செய்த இந்து மகாசபை கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உ.பி. அரசை கண்டித்தும் உடன்குடி வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் உடன்குடி பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் முத்து முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப் தொடங்கி வைத்தார். இதில் தெற்கு மாவட்ட பொருளாளர் நடராஜன், துணைத்தலைவர் ஆதிலிங்கம், வட்டார துணைத்தலைவர் ரகுமத்துல்லா, பொருளாளர் அருள்ராமச்சந்திரன், மாவட்ட இலக்கிய பிரிவு தலைவர் முத்துகுமார், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹென்றி, வட்டார செயலாளர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் சிவநேசன், முன்னாள் வட்டார தலைவர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






