என் மலர்
நீங்கள் தேடியது "மதுபானங்கள் விலை உயர்வு"
- விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.
- அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசின் வருவாயை பெருக்க கலால்வரி, நில வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது.
கலால்வரி உயர்வால் புதுவையில் மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஏற்கனவே கொள்முதல் செய்த மதுபானங்களுக்கு பொருந்தாது, அவற்றை பழைய விலைக்கே விற்க கலால்துறை உத்தரவிட்டிருந்தது. இதனால் விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலை கொண்ட ரூ.60 விலை கொண்ட குவார்ட்டர் மது ரூ.72 முதல் ரூ.74 வரை விற்கப்படுகிறது. அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.
இதுபோல அனைத்து மதுபானங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது மது பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மதுபான விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த காலத்தைபோல தொடர்ந்து விற்பனை நடக்குமா? விலை உயர்வால் மது விற்பனை சரிவை சந்திக்குமா? என மது விற்பனையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- 750 மி.லி. கொண்ட முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது.
- இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.
புதுச்சேரியில் மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. 750 மி.லி. கொண்ட முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது.
பீருக்கான விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு பிராண்டிற்கு தகுந்தபடி கணக்கிடப்படும்.
புதுவையில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த மதுபான கடைகளில் 1800-க்கும் அதிகமான மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை விட பல்வேறு விதமான மதுபான வகைகள் கிடைப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் புதுவைக்கு மது பிரியர்கள் வருகை அதிக அளவில் உள்ளது.
இதனால் புதுவை மாநிலத்தில் வரி வருவாய் கலால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மதுபானங்களுக்கு கலால் வரி, கூடுதல் கலால் வரி, ஹாலோ கிராம் கட்டணம் ஆகியவை வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை குறைவானது. சாதாரணமானது, நடுத்தரமானது, விலை உயர்ந்தது என 4 பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

நடுத்தர, விலை உயர்ந்த பிரிவுகள் என இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு கேஸ் ரூ.400 முதல் ரூ.600-க்கு மேலான மதுபானங்களுக்கு ரூ.100 ஆக இருந்த கலால்வரி ரூ.110 ஆகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து கலால்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, புதுவையில் மது பானங்களுக்கான கலால் வரி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு மாதந்தோறும் ரூ.2 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். கலால் வரி உயர்வு காரணமாக குறைந்த மற்றும் சாதாரண விலை மது பாட்டில் குவாட்டருக்கு ரூ.5ம், முழு பாட்டில் ரூ.15 வரையிலும் விலை உயர வாய்ப்புள்ளது.
உயர்ந்த விலை முழு பாட்டில் ரூ.20 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர். #LiquorPriceHike






