என் மலர்
நீங்கள் தேடியது "Liquor Prices Hiked"
- விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.
- அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசின் வருவாயை பெருக்க கலால்வரி, நில வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது.
கலால்வரி உயர்வால் புதுவையில் மதுபானங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஏற்கனவே கொள்முதல் செய்த மதுபானங்களுக்கு பொருந்தாது, அவற்றை பழைய விலைக்கே விற்க கலால்துறை உத்தரவிட்டிருந்தது. இதனால் விலை உயர்வுக்கு பின் 10 நாட்களாக பழைய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முதல் உயர்த்தப்பட்ட புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலை கொண்ட ரூ.60 விலை கொண்ட குவார்ட்டர் மது ரூ.72 முதல் ரூ.74 வரை விற்கப்படுகிறது. அதிகமாக விற்பனையாகும் பிராண்டட் மது குவார்ட்டர் ரூ.120-ல் உயர்த்தப்பட்டு, ரூ.147-க்கு விற்கப்படுகிறது.
இதுபோல அனைத்து மதுபானங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது மது பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மதுபான விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த காலத்தைபோல தொடர்ந்து விற்பனை நடக்குமா? விலை உயர்வால் மது விற்பனை சரிவை சந்திக்குமா? என மது விற்பனையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, பீர் இதில் எதை மதுப்பிரியர்கள் அதிகம் வாங்குகின்றனர் என கணக்கெடுக்கப்பட்டது.
- விற்பனையாகாத மதுபானங்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியான உடன் தனியாரிடம் இருந்த மதுபான கடைகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
கடந்த 4½ ஆண்டுகளில் ஆந்திர அரசுக்கு ரூ.1.10 லட்சம் கோடி மது விற்பனை மூலம் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர அரசு மதுபான விற்பனையை அதிகரிக்க என்ன செய்யலாம் என பல்வேறு கோணங்களில் ஆலோசித்தது.
மேலும் மதுபான விற்பனை குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். எந்த வகையான ஆல்கஹால் குடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பிராந்தி, விஸ்கி, ரம், வோட்கா, பீர் இதில் எதை மதுப்பிரியர்கள் அதிகம் வாங்குகின்றனர் என கணக்கெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுபானங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் 40 வரையிலும் புல் பாட்டிலுக்கு ரூ.10 முதல் 90 வரையிலும் உயர்ந்துள்ளது.
சிலவகை மதுபானங்களின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதிகமாக விற்பனையாகும் மதுபாட்டில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விற்பனையாகாத மதுபானங்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கும் விற்பனை அளவு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.






