என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வணிக நிறுவனங்கள்"

    • கட்டாயம் இருக்கை வழங்க வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் 2 நாட்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து தொழிலாளர் நல அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    தமிழ்நாட்டில் ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஊழியர்கள் பல மணி நேரம் நின்றுக் கொண்டே வேலை பார்க்கும் நிலை இருந்தது.

    அதனால், நின்றுக் கொண்டே வேலை பார்க்கும் கடைகளில் அவர்கள் அமர இருக்கை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது.

    இதைதொரட்ந்து, தமிழக அரசு "உட்காரும் உரிமை" Right to Sit சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    கேரளாவை தொடர்ந்து, தமிழகத்திலும் கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாதபோது அமர்ந்து கொள்ள இருக்கை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

    இந்நிலையில், ஈரோட்டில், கடைகள், வணிக நிறுவனங்களில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு இடையிடையே அமர்ந்து கொள்ள, கட்டாயம் இருக்கை வழங்க வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் 2 நாட்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில், அரசின் சட்டத்தை பின்பற்றாமல் ஈரோட்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கை வழங்காத 31 கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து தொழிலாளர் நல அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    தமிழக அரசு சார்பில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாவட்ட  கலெக்டர் வினீத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு சார்பில் கொரோனா  நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடை கை கழுவுதல், கூட்டநெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றையும் அரசு ஊக்குவித்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தெருக்கள், பொது இடங்கள், சந்தைகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஓய்வறைகள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் போன்ற இடங்களில் பணிபுரியும் தனிநபர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    ஆகவே பொது சுகாதார துறையின் மூலம் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    ஆகவே, அனைத்து வணிக நிறுவனங்களும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தேனியில் உள்ள 2 வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    தேனியில் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான எம்.எம். மளிகை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடியாக இது உள்ளது.

    இதன் சார்பு நிறுவனமாக ஆர்.ஜி. கண்ணா எண்ணெய் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனங்களில் முறையான வருமானவரி தாக்கல் செய்யாமல் இருந்ததாகவும், ஜி.எஸ்.டி. வரி செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த 2 நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் உரிமையாளர் வீடு மற்றும் மேலாளர் வீடு, அலுவலகம், உற்பத்தி பொருள் பேக்கிங் செய்யும் பகுதி என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.

    வருமானவரித்துறை சோதனையால் அலுவல கங்கள் மற்றும் வீடுகள் பூட்டப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் தேனியிலும் இந்த சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×