என் மலர்
நீங்கள் தேடியது "கண்ணையா குமார்"
- ராணா நடு கடுத்தப்பட்ட மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ராஜாங்க ரீதியிலான வெற்றி- அமித் ஷா.
- இது வெற்றி அல்ல, மக்களை திசை திருப்புவதற்கான சூழ்ச்சி- கண்ணையா குமார்.
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ராணா இந்தியா கொண்டு வரப்பட்டது, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ராஜாங்க ரீதியிலான வெற்றி (diplomatic success) என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் கண்ணையா பதில் அளிக்கையில் "ராணா நாடு கடுத்தப்பட்டது ராஜாங்க ரீதியிலான (diplomatic success) வெற்றி அல்ல. மத்திய அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைவதில் இருந்து பொது மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்கான சூழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக பெயருக்கு ஏற்ற சாதனை எதையும் செய்யவில்லை என்பதால், ஏதாவது ஒரு சாக்குப்போக்கின் கீழ் பொதுப் பிரச்சினைகளைத் திசை திருப்ப முயற்சிக்கிறது. வக்ஃப் மசோதாவும் அதற்கு மற்றொரு உதாரணம்தான்.
ஏழை முஸ்லிம்களின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வருவதாக அரசாங்கம் கூறியது. முஸ்லிம் சமுதாயத்தினர் தங்களுக்கு சொந்தமான இடங்களின் மொட்டை மாடிகளில் 'நமாஸ்' செய்ய அனுமதிக்காத ஒரு ஆட்சியில் இருந்து இப்படி கூறுவதை, யார் நம்புவார்கள்?
370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அவர்களின் சொல்லாட்சியை நாம் அனைவரும் நினைவில் கொள்கிறோம். இப்போது பீகார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும் என்று ஒவ்வொரு பாஜக தலைவரும் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போதிருந்து அங்கு சொத்து வாங்க முடிந்த ஒருவரை எனக்குக் காட்டுங்கள்" என்றார்.

பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு கடைப்பிடித்தனர்.
அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட உண்மையான வீடியோ ஆதாரங்களை சி.பி.ஐ. தடயவியல் ஆய்வுக்கூடத்திற்கு டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றதால் அவர்கள் சிறையில் இருந்து வெளியேறினர்.

இந்திய குற்றவியல் சட்டம் 124A 323, 465, 471,143, 149, 147, 120B ஆகிய பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, அகிப் ஹுசேன், முனீப் ஹுசேன், உமர் குல், ரயீயா ரசூல், பஷீர் பட், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் அபரஜிதா ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக கோர்ட் நாளை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்ணையா குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மூன்றாண்டுகளுக்கு பின்னர் தற்போது எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக போலீசாருக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது. என் நாட்டின் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என கண்ணையா குமார் குறிப்பிட்டுள்ளார். #JNUSUpresident #KanhaiyaKumar