search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanhaiya Kumar"

    • கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.
    • 2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    டெல்லி மாநிலத்தில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்குகிறது. மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ், நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் மூன்று தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் கணையா குமாருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா வேட்பாளர் போஜ்புரி பாடகர் மனோஜ் திவாரியை எதிர்த்து களம் காண்கிறார்.

    கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் பல்கலைக்கழக வளாகததிற்கு வெளியே இருந்துதான் கோஷமிட்டது தெரியவந்ததால் விடுதலை செய்யப்பட்டார்.

    2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெகுசரை தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பா.ஜனதா வேட்பாளர் கிரிராஜ் சிங்கிடம் தோல்வியடைந்தார்.

    கணையா குமார் காங்கிரஸ் கட்சியில் துசிய மாணவர்கள் அமைப்பின் மாணவர்கள் அணி பொறுப்பாளராக உள்ளார்.

    காந்திசவுக் தொகுதியில் இருந்து 1984, 1989 மற்றும் 1996-ல் வெற்றி பெற்ற மூத்த தலைவர் ஜே.பி. அகர்வால் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வடமேற்கு டெல்லி (எஸ்சி) தொகுதியில் உதித் ராஜ் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் 2014-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2019 தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    டெல்லியில அடுத்த மாதம் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    பீகாரில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கை எதிர்த்து டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். #LokSabha #KanhaiyaKumar #GirirajSingh
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம், பெகுசாராய் பாராளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் (வயது 32) போட்டியிடுகிறார்.

    இவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தேசத்துரோக வழக்கில் சிக்கியவர். இவர் பெகுசாராய் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த அறிவிப்பை டெல்லியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கே. நாராயணா வெளியிட்டு நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், “பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துபரிஷத் ஆகிய அமைப்புகள் சாதி, இனம் அடிப்படையில் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றன என்பதை வெளிப்படுத்த கடுமையாக உழைத்தவர் கன்னையா குமார். நாட்டில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான அரசியல் முகமாக அவர் ஆகி உள்ளார்” என கூறினார்.
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கண்ணையா குமார் பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளராக களமிறங்கினார். #CPIcandidate #KanhaiyaKumar #Begusaraicandidate #LokSabhaelections
    பாட்னா:

    ஜே.என்.யூ. என்றழைக்கப்படும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராக பொறுப்பு வகித்த கண்ணையா குமார் கடந்த 2016-ம் ஆண்டு ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

    இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்த  கண்ணையா குமார் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து இடதுசாரி சிந்தனைகளை முன்னிறுத்தி பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக  கண்ணையா குமார் போட்டியிடுவார் என அக்கட்சியின் பீகார் மாநில பொதுச்செயலாளர் சத்யநாரயண சிங் இன்று அறிவித்துள்ளார். 

    சாதி, மதம் மற்றும் சமுதாயங்களில் பெயரால் நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பிவரும் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜகவின் நிஜமுகத்தை தோலுரித்து காட்டிய கண்ணையா குமாரை இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். பீகாரில் உள்ள மற்ற தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். 

    இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்-குக்கு எதிராக கண்ணையா குமார் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #CPIcandidate #KanhaiyaKumar #Begusaraicandidate #LokSabhaelections 
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகளை ஆதரித்து பேசிய கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று கோர்ட்டில் 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #JNUSUpresident #KanhaiyaKumar
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட தினத்தை துக்கத்தினமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சில மாணவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு கடைப்பிடித்தனர்.

    அப்போது அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டதாக, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட உண்மையான வீடியோ ஆதாரங்களை சி.பி.ஐ. தடயவியல் ஆய்வுக்கூடத்திற்கு டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றதால் அவர்கள் சிறையில் இருந்து வெளியேறினர்.

    கண்ணையா குமார் கைதை கண்டித்து டெல்லி மற்றும் வேறுசில பகுதிகளில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாகவும் வெடித்தது.


    இந்நிலையில், கண்ணையா குமார் உள்ளிட்டோருக்கு எதிராக இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்திய குற்றவியல் சட்டம் 124A 323, 465, 471,143, 149, 147, 120B ஆகிய பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் கண்ணையா குமார், உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, அகிப் ஹுசேன், முனீப் ஹுசேன், உமர் குல், ரயீயா ரசூல், பஷீர் பட், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜாவின் மகள் அபரஜிதா ராஜா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக கோர்ட் நாளை பரிசீலிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்ணையா குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    மூன்றாண்டுகளுக்கு பின்னர் தற்போது எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக போலீசாருக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது. என் நாட்டின் நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என கண்ணையா குமார் குறிப்பிட்டுள்ளார். #JNUSUpresident #KanhaiyaKumar 
    பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஜே.என்.யு. மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #KanhaiyaKumar
    பாட்னா:

    டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அணி தலைவராக இருந்து வருபவர் கன்னையா குமார். இவர் பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார்.

    பெகுசராய் மாவட்டம் தஹியா கிராமத்தில் உள்ள பகவான்பூர் காவல் நிலையம் அருகே நிகழ்ச்சி முடிந்து கன்னையா குமார் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கன்னையா குமார் இருந்த காரின் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.



    இதுதொடர்பாக, இரு தரப்பினரும் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜே.என்.யு. மாணவர் அணி தலைவர் கன்னையா குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #KanhaiyaKumar
    டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரான கன்னையா குமார் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #KanhaiyaKumar
    பாட்னா:

    டெல்லியில் அமைந்துள்ளது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். இதன் மாணவர் சங்க தலைவரான கன்னையா குமார் உள்பட 4 மாணவர்கள் கடந்த 9.2.16 அன்று அப்சல் குரு நினைவு தினத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளிவந்தார்.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இவர் பீகார் மாநிலம் பெகுசராய் லோக்சபா தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது.

    கன்னையா குமார் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அப்சல் குருவை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #KanhaiyaKumar
    ×