ஜே.என்.யு. பல்கலை மாணவர் கன்னையா குமார் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவரான கன்னையா குமார் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #KanhaiyaKumar
ஜே.என்.யு. பல்கலை மாணவர் கன்னையா குமார் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்
Published on

பாட்னா:

டெல்லியில் அமைந்துள்ளது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். இதன் மாணவர் சங்க தலைவரான கன்னையா குமார் உள்பட 4 மாணவர்கள் கடந்த 9.2.16 அன்று அப்சல் குரு நினைவு தினத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளிவந்தார்.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இவர் பீகார் மாநிலம் பெகுசராய் லோக்சபா தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது.

கன்னையா குமார் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அப்சல் குருவை ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #KanhaiyaKumar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com